India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள கரூரை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (www.sdat.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சிய வர்ணா அவரது பெயரில் போலி பேஸ்புக் , வாட்ஸ் அப் கணக்குகள் துவங்கி நண்பர்களிடம் பண உதவி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என தகவல் கிடைத்தது. இதையடுத்து தனது பெயரில் போலியான கணக்குகள் துவங்கிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று சைபர் கிரைமில் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். இதை அனைவருக்கும் share செய்யவும்.
கரூர் மாவட்ட கிராமங்கள், நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற, தங்களது விவரங்களை இணையதள முகவரியில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் (https://tnsocialwelfare.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நங்கவரம் சபரி மேடு பகுதியில் பார்த்திபன் என்பவர் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று திருச்சியை சேர்ந்த பிரவீன், குமார், சங்கப் பிள்ளை, ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து மீன்களை திருடியபோது, கையும் களவுமாக பிடித்து குளித்தலை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் புக்கர்மாஜி – சன்மதிதேவி ஆகியோர் கரூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் புக்கர்மாஜிக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை கல்லால் தாக்கிக் கொன்று தப்பியோடினார். இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த புக்கர்மாஜி நேற்று கைது செய்யப்பட்டார்.
கரூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. (ஒரு கிலோ மதிப்பீட்டில்), குண்டுமல்லி ரூ.800, முல்லைப்பூ ரூ.600, ஜாதிப்பூ 500, செவ்வந்தி பூ 200, ரோஜா பூ 300, சம்பங்கி பூ 250க்கும், மருவி நாலு கட்டு ரூ.100க்கும், துளசி 4 கட்டு ரூ.50க்கும் விற்பனையானது. சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர்: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்த 100 மாணவர்களுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு ஓராண்டு பயிற்சி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு 21 – 36 வயது நிரம்பிய, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவையும் தாட்கோ வழங்கும். இதற்கு www.tahdco.com-ல் பதிவு செய்யலாம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல், தலைமையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள முதலமைச்சர் கோப்பை 2024-2025 க்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளார்.
நில மோசடி வழக்கில் கடந்த இரண்டாம் தேதி சி பி சி ஐ டி போலீசார் முன்னாள் அமைச்சர் தம்பி எம்.ஆர். சேகரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். சிபிசிஐடி போலீசார்
காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வெள்ளியணை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட கடந்த 12.8.24 தேதி இரவு நடந்த கொலை மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த அலுவலர்கள் மற்றும் காவலர்களான , எழிலரசன், அன்புச்செல்வன், திருமுருகன், செல்லப்பாண்டி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி வெகுமதி வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.