India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜன.16) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. சுற்றுலா மயமான குமரிக்கு காணும் பொங்கல் கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று(ஜன.15) நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். குமரியில் மட்டும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.
#புதுக்குடியிருப்பில் மாலை 6 மணிக்கு மாநில அளவிலான கைப்பந்து போட்டி.#புவியூர் முத்தாரம்மன் கோவில் பொங்கல் விழாவில் காலை 9 மணிக்கு கலை போட்டிகள், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம்.#சந்தையடி பொங்கல் விழாவில் காலை 8 மணிக்கு கோமாதாவுக்கு அமுது படைத்தல், 10 மணிக்கு விளையாட்டு போட்டிகள்.#நாகர்கோவில் கோடி அற்புதர் புனித அந்தோணியார் ஆலய விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி ஆகியன நடைபெறும்.
தாரகை எம்எல்ஏ நேற்று(ஜன.15) வெளியிட்ட அறிக்கையில், நான் வைத்த கோரிக்கைக்கு இணங்க இன்று முதல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தேநீர் கடைகளை மீண்டும் இரவு நேரத்திலும் திறப்பதற்கு அனுமதி வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு என்னுடைய சார்பாகவும், காங்கிரஸ் கட்சியின் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட பொங்கல் விடுமுறை ஒட்டி நேற்று(ஜன.15) அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் தொடர்ந்து படகு போக்குவரத்து நடைபெற்றது. இதில், நேற்று மட்டும் சுமார் 11 ஆயிரம் பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் புதிதாக எஸ்பி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு இரவு 11 மணிக்கு மேல் செயல்படும் தேநீர் கடைகள், ஹோட்டல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது, இந்நிலையில் இந்த முடிவை பரிசீலனை செய்ய வியாபாரிகள் சங்கத்தினர் தொடர் கோரிக்கையை எஸ்பி ஸ்டாலின் முன்வைத்து வந்தனர், இரவு நேர தேனீர் கடை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு சிலகட்டுப்பாட்டுகளுடன் தேநீர் கடைகள் செயல்பட உத்தரவு.
தமிழ்நாடு சட்டமேலவை முன்னாள் எதிர்கட்சி தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், குமரி மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் தூணாய் இருந்தவருமான சங்கரலிங்கம் நினைவுநாள் இன்று(ஜன.15). அன்னாரது நினைவு நாளில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று முன்னாள் எம்.எல்.ஏ சுரேஷ் ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடற்கரைப் பகுதியில் இருந்து தெற்கு கடலுக்குள் 5 நாட்டிக்கல் தூரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீட்டர் வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது கரையிலிருந்து 25 முதல் 30 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும். எனவே மீனவர்கள் வருகிற சனிக்கிழமை(ஜன.18) வரை மீன்பிடிக்க செல்லாமல் தவிர்ப்பது நல்லது என்று கன்னியாகுமரி தனியார் வானிலை ஆய்வு மையம் நேற்று(ஜன.14) தெரிவித்துள்ளது.
இந்திய விமானப்படை நேரடி ஆட்சேர்ப்பு கொச்சின் விமானப்படை முகாமில் வைத்து 28.01.2025 முதல் 06.02.2025 வரை மருத்துவ உதவியாளர், மெடிக்கல் அசிஸ்டன்ட், மருந்தாளுநர் போன்ற பணிகளுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருப்பதாவது; ஊர் மக்களுக்கு நேரடி தொடர்பு வசதியை ஏற்படுத்துவதில் சாலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஊரக பகுதி மக்களுக்கு மிக முக்கிய இணைப்பாக ஊரக சாலைகள் செயல்படுகின்றன. குமரி மாவட்டத்தில் ரூ 6.11 கோடியில் 9 சாலைகள் 12.93 கி.மீ. தூரம் போடப்படுகிறது. இந்த பணி விரைவில் துவங்கும் என கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்த இனிய பொங்கல் திருநாளில் அரும் சுவை பொங்கலைப் போல் வளம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வாழ்வில் பொங்கி நிறைந்திட எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.