Kanyakumari

News August 26, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து அலுவலர்கள் பட்டியல் வெளியீடு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (26.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் SSI மற்றும் HC அலுவலர்களின் பெயர், கைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாகர்கோவில், மார்த்தாண்டம், குலசேகரம், கன்னியாகுமரி பகுதிகளில் தனித்தனியாக ரோந்து மேற்கொள்ளப்படவுள்ளது. அவசர சூழ்நிலையில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை 04652-220417 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News August 26, 2025

குமரியில் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா…?

image

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட குமரி மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!

News August 26, 2025

குமரி: தேர்வு இல்லாமல்..இரயில்வே வேலை.!

image

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் <>இங்கே கிளிக் செய்து<<>> ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு, இதை MISS பண்ணாம அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 26, 2025

குமரியில் விநாயகருக்கு ஒரு டன் பழங்களால் அலங்காரம்

image

குமரி: விவேகானந்த கேந்திரவளாகத்தில் ஏகாட்சர மகா கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஆக.18ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவான இன்று(ஆக.26) விநாயகருக்கு ஒரு டன் எடையுள்ள ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை அன்னாசி, வாழைப்பழம். சாத்துக்குடி உள்பட பல வகையான பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

News August 26, 2025

குமரியில் இப்படி ஒரு அதிசிய விநாயகரா?

image

குமரி: கேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் இந்த அதிசிய விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும் மாறி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.மிகவும் பிரசித்திபெற்ற இந்த விநாயகருக்கு நாளை(ஆக.27) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்க நடக்கவிருக்கும் சிறப்பு பூஜையில் நீங்களும் உங்க குடும்பத்தோட போய் தரிசனம் செய்து பாருங்க.. SHARE IT

News August 26, 2025

கன்னியாகுமரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

கன்னியாகுமரி மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 26, 2025

குமரி: வங்கி வேலைக்கு இன்றே கடைசி நாள்

image

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

News August 26, 2025

குமரியில் ஜாம்பவான்களை உருவாக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுகிறது. அதில் பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர் ஆகிய 3 இடங்களில் தலா ரூ.3 கோடி மதிப்பில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க மொத்தம் ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

WHATSAPP பயன்படுத்துறீங்களா? – குமரி போலீஸ் எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை வெளியிட்ட முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:- படத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று. apk என்ற whatsapp இல் தெரிந்தவர்களோ தெரியாதவர்களோ அனுப்பினாலும் அதனை click செய்ய வேண்டாம். உங்களுடைய வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு பண இழப்பிற்கும் காரணமாக அமையும். எனவே அனைவரும் விழிப்புடன் இருக்க குமரி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 25, 2025

குமரியில் இனி அரசு அலுவலகம் செல்ல வேண்டாம்

image

குமரியில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்து நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழக பத்திர பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!