India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகர்கோவில் – தாம்பரம் சிறப்பு ரயில் சேவை பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் – தாம்பரம் அதிவிரைவு வண்டி(06012) ஏப்ரல் 13,20,27, மே 4,11,18,25, ஜூன் 1,8,15,22,29 ஆகிய தேதிகளிலும், மறு மார்க்கத்தில்(06011) ஏப்ரல் 14,21,28, மே 5,12,19,26 ஜூன் 2,9 16,23,30 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது. SHARE IT.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு உபரி நதிநீர் இணைப்பு கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்தார். எனது தந்தை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சட்டமன்றத்தில் எடுத்துரைத்து நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து தற்போது முடிவடைந்து திறப்பு விழா நடந்துள்ளது. அன்று வசந்த குமார் கண்ட கனவு இன்று நனவாகியுள்ளது என விஜய் வசந்த் MP பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் உள்ள பூம்புகார் விற்பனை மையத்தில் நபார்டு வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாஞ்சில் திருவிழா கண்காட்சியினை தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வாங்கும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026-ம் ஆண்டிற்கான 8-ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு சென்னை உள்ளிட்ட குறிப்பிட்ட சில மையங்களில் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்வு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். இதற்கான விண்ணப்பத்தை www.rimcgov.in மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அழகுமீனா நேற்று அறிவித்துள்ளார்.
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மது பானக்கடைகள் மற்றும் எப். எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசியை கருத்தில் கொண்டால் இது மிகவும் குறைவான தொகை ஆகும். 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இந்த தொகையை உயர்த்தி வழங்க நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி ஒத்திவைப்பு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நாளை(பிப்.8) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் செய்தல், மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் ஆகியவை பெறப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்படும் என கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று(07.02.2025) கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுகிதா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, அலுவலக மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருநெல்வேலியில் இன்று (பிப். 7) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை திராவிட முன்னேற்ற கழகத் தணிக்கைக்குழு உறுப்பினரும் குமரி மாவட்ட முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புனலூர் – கன்னியாகுமரி – புனலூர் பயணிகள் ரயில்(56705/56706), சோதனை முறையில் பரவூர் நிலையத்தில் கூடுதலாக நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்து பிப்ரவரி 8 முதல் புறப்படும் சேவைகள் மற்றும் புனலூரில் இருந்து பிப்ரவரி 9 முதல் புறப்படும் சேவைகள் பரவூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.