Kanyakumari

News September 6, 2025

குமரி: செல்போன் தொலைந்தால் என்ன செய்யலாம்?

image

குமரி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். உடனே போன் Switch Off ஆகிவிடும். பின்பு உங்களது செல்போனை டிரேஸ் செய்து கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 6, 2025

தோவாளையில் பிரம்மாண்ட அத்தப்பூ கோலம்

image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று (செப். 5) பூக்களுக்கு பிரசித்தி பெற்ற தோவாளை மலர் வணிக வளாகத்தில் வண்ண வண்ண பூக்களால் கிருஷ்ணன் புதூர் இளைஞர்கள் கைவண்ணத்தில் அழகிய பிரம்மாண்டமாக மகாபலி சக்கரவர்த்தி மன்னனின் உருவத்தில் அத்தப்பூ கோலம் போடப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் செல்லும் மக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

News September 6, 2025

குமரி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு பாஜக மாநில பொறுப்பு

image

பாரதிய ஜனதா கட்சியின் மாநில வர்த்தக பிரிவு அமைப்பாளராக கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சதீஷ் ராஜா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

News September 5, 2025

குமரியில் பெட்ரோல் தரமாக இல்லையா??

image

குமரி மக்களே உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நீங்கள் வாகனங்களில் போடும் பெட்ரோல் தரமானதாக இல்லையா? இதனால் உங்க வாகனங்களின் மைலேஜ் பாதிக்கப்படலாம். உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள் போடும் பெட்ரோல் தரமாக இல்லாமல் இருந்தா புகார் அளித்து தெரியபடுத்துங்க..
இந்தியன் ஆயில் – 18002333555
BHARAT பெட்ரோல் – 1800 22 4344
H.P பெட்ரோல் -1800-2333-555
நம்ம மக்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 5, 2025

குமரி: மின்வாரியத்தில் வேலை அறிவிப்பு

image

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் 1,794 கள உதவியாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அக்.02 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.18,800-ரூ.59,900 வரை வழங்கப்படும். இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க. உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

குமரி: சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

குமரி சுற்றுலா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சுற்றுலா விருது உலக சுற்றுலா தினமான (செப் 27) வழங்கப்பட உள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tntourisum.com என்ற இணையதள முகவரியில் (செப் 15) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News September 4, 2025

குமரி மாவட்ட அனைத்து காவல்நிலையங்களின் எண்கள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு <>CLICK <<>>கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இடம்பெற்றுள்ளது. தேவைப்படும் சமயத்தில் நீங்கள் உங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதன் மூலம் அழைக்கலாம். இதனை மற்ற பகுதியிலுள்ள உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 4, 2025

மருத்துவ கல்லூரியில் சான்றிதழ் பாடங்களில் 178 காலியிடங்கள்

image

குமரி மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில். கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கான எமர்ஜென்சி கேர் டெக்னீசியன், அனஸ்தீசியா தியேட்டர் ஆர்த்தோபெடிக் டெக்னிசியன்கள் உட்பட 178 காலியிடங்கள் உள்ளன. இந்த விபரங்கள் கல்லூரி அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வழங்கலாம் என கூறியுள்ளார்.

News September 4, 2025

குமரியில் ரூ.71,900 ஊதியத்தில் அரசு வேலை ரெடி

image

குமரி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10-ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <>இங்கே கிளிக் செய்து <<>>செப். 30 வரை விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். மாவட்ட வாரியாக பணிநியமனம் செய்யப்படும். சொந்த ஊரில் அரசு வேலை! எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News September 4, 2025

குமரி: சாட்சி சொன்ன பெண்ணை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

image

நித்திரவிளையை சேர்ந்தவர் விஜூராஜ்(42). 20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தங்கையின் தோழியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மகளுக்கு ஆதரவாக சாட்சி சொன்னதால் பெண்ணின் தாயாரை கத்தியால் விஜூராஜ் வெட்டினார். இதில் நேற்று விஜூராஜூக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

error: Content is protected !!