Kanyakumari

News February 15, 2025

விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக எஸ்பியிடம் கோரிக்கை மனு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டங்கள் நடக்கும் 2 நாட்கள் டாரஸ் லாரிகளை குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க கூடாது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் நாஞ்சில் ராஜா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார். உடன் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் கார்த்திக். மாநகர் பொதுச் செயலாளர் கார்கில்மணிகண்டன், செயலாளர்கள் ரமேஷ் காசிவிஸ்வநாதன், பாஜக ரூபின் பலர் உடனிருந்தனர்.

News February 15, 2025

குமரி: புத்தக திருவிழா துவக்கம் 

image

குமரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் 6-வது புத்தகத் திருவிழா இம்மாதம் 19ஆம் தேதி நாகர்கோவில் SLB மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி மார்ச் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவில் சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கம், 120க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், செயற்கை நுண்ணறிவு கண்காட்சி கண் கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

News February 15, 2025

ஆய்வுக் குழு உறுப்பினராக குமரி எம்பி நியமனம்!

image

குமரி பாராளுமன்ற உறுப்பினராக விஜய் வசந்த் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் மத்திய அரசால் 2025ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்வதற்காக சபாநாயகரால் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் உறுப்பினராக விஜய் வசந்த் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News February 15, 2025

குமரி: 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாக வாய்ப்பு

image

குமரி மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று(பிப்.15) குலசேகரம், நாகர்கோவில், ஆரல்வாய்மொழி ஆகிய பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

News February 15, 2025

குமரியில் பிளஸ் 1 தேர்வு எழுதும் 22,015 மாணவர்கள்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 5,482 மாணவர்கள், 5,782 மாணவிகள் என 11 ஆயிரத்து 264 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 5,048 மாணவர்கள், 5,703 மாணவிகள் என 10 ஆயிரத்து 751 பேரும் மொத்தமாக 22 ஆயிரத்து 15 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.

News February 15, 2025

குமரி – திருவனந்தபுரம் ரயில் பாதைக்கு 30 ஹெக்டேர் தேவை

image

குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 2வது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழகப் பகுதியில் 46.39 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதில் இதுவரையிலும் 16.41 ஹெக்டேர் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 30 ஹெக்டேர் நிலம் இன்னும் ஆர்ஜிதம் செய்ய வேண்டியது உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

News February 15, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.15) காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் ரப்பர் தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 71வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் இளங்காமணிபுரம் பகுதியில் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடக்கிறது.#மாலை 4:30 மணிக்கு SDPI மாநாடு விளக்க பொதுக்கூட்டம் குளச்சல் சந்திப்பில் நடக்கிறது.

News February 15, 2025

பட்டதாரிகளுக்கு ரூ. 1 கோடி திருமண உதவி – அமைச்சர் கீதாஜீவன்

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு 201 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.1 கோடி திருமண நிதியுதவியும், 40 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.10 லட்சம் திருமண நிதியுதவியும் என மொத்தம் 241 பயனாளிகளுக்கு ரூ.1.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் நேற்று(பிப்.14) நாகர்கோவிலில் தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

பட்டதாரிகளுக்கு ரூ. 1 கோடி திருமண உதவி -அமைச்சர் தகவல்

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2024-2025 ஆம் நிதியாண்டிற்கு 201 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.1,00,50,000/- திருமண நிதியுதவியும், 40 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.10,00,000/- திருமண நிதியுதவியும் என மொத்தம் 241 பயனாளிகளுக்கு ரூ.1,10,50,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்று அமைச்சர் கீதா ஜீவன் நேற்று நாகர்கோவிலில் கூறினார்.

News February 15, 2025

நாகர்கோவில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (பிப் 14) அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் நாகர்கோவிலில் பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை பகுதியில் 35 டிகிரி செல்சியஸும், மேல்புறம் பகுதியில் 35 டிகிரி செல்சியஸும், நட்டாலத்தில் 33 டிகிரி செல்சியஸும், கன்னியாகுமரியில் 32 டிகிரி செல்சியஸும், கிள்ளியூர் மற்றும் நெய்யூர் பகுதிகளில் தலா 31 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்தது.

error: Content is protected !!