India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
#இன்று(பிப்.18) காலை 9 மணிக்கு ரெஜின் முந்திரி தொழிற்சாலையில் 30 பேருக்கு ஒரு வருடமாக வேலை வழங்காததை கண்டித்து மாறப்பாடியில் சிஐடியு முந்திரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு கோணம் TNCSC அலுவலகம் முன்பு சலுகைகள் வழங்க கோரி சுமை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5.45 மணிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மும்பையில் இருந்து மார்ச் 10,12 & 17ஆம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதே போன்று நாகர்கோவிலில் இருந்து 11,13 & 18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நெல்லை வழியாக இந்த ரயில் செல்லும். SHARE IT.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிரபல ஹோட்டல் மற்றும் வீடுகளில் செயல்பட்டு வந்த ஸ்பா, ஆயுர்வேத மசாஜ் சென்டர்களில் நேற்று(பிப்.17) போலீசார் சோதனை நடத்தினர். அதில், வடசேரி மற்றும் நேசமணி நகர் பகுதி ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தியதாக 7 பெண்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அய்யா வைகுண்ட சுவாமியின் 193 வது அவதார தின விழாவுக்கு தமிழகம் முழுவதும் 4 மார்ச் 2025 அன்று மது கடைகளுக்கு விடுமுறை அளிக்க குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அய்யாவைகுண்ட சாமி அவதாரவிழாக்காக கன்னியாகுமரி, நெல்லை, துத்துகுடி தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும் தமிழக அரசின் வரையருக்கபட்ட விடுமுறையும் அனுமதிக்கபட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள 10 காவல் நிலையங்களுக்கு CCTV கேமரா அமைப்பு நிறுவுவதற்காக விலைப்புள்ளிகள்(Quotations) 28.02.2025 ஆம் தேதிக்குள் கோரப்படுகின்றன. தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை மாவட்ட காவல் அலுவலக பண்டகப்பிரிவில் (Store Section) பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.ள
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது ஆகிய பணிகளுக்காக கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி என்பவர் பொறுப்பாளராக அதிமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் தொடரப்பட்ட வழக்கில்சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்புவழங்கி உள்ளது. கொள்ளை வழக்கில் உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், ரூ.1000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் அந்நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 21.02.2025 அன்று காலை 10.00 மணிக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.*ஏலம் எடுக்கும் நண்பர்களுக்கு பகிருங்கள்*
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை சிவராத்திரி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கும் சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். சிவ தொண்டர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் நடைபயணமாகவும் 12 சிவாலயங்களையும் வணங்கி வருவது வழக்கம். எனவே அந்த இரண்டு தினங்களும் 12 சிவாலயங்களுக்கு செல்லும் வழிகளில் கனரக வாகனங்கள் அனுமதிக்க வேண்டாம் என்று இந்து சமயப் பேரவை தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்ி.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை செல்லும் வழியில் காண்போரை கவரும் வகையில் வரலாற்று சிறப்பு மிக்க நரிச்சிப்பாறை உள்ளது. மாம்பழத்து துறையாறு அணையை பார்க்க செல்லும் சுற்றுலா பயணிகள் நரிச்சிப்பாறையையும் பார்வையிட்டு அதனையும் போட்டோ எடுத்து செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.