Kanyakumari

News February 14, 2025

குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஜனவரி 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

குமரி வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர்

image

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இம்மாதம் 16ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். அன்று காலை 9 மணிக்கு திருநெல்வேலியிருந்து புறப்படும் அவர், 11:30 மணிக்கு குழித்துறையில் உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

News February 14, 2025

சிறுமி பாலியல் வன்புணர்வு: வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்

image

இணையம்புத்தம்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுதன்(32). இவர் 14 வயது மாணவி ஒருவரை பெங்களூர் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் சுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தரையா இன்று சுதனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

News February 14, 2025

குமரியில் 1.98 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தின் கீழ் கிராம அலுவலகங்கள் ஊராட்சி அலுவலகங்களில் பதிவுகள் தொடங்கியுள்ளன. விவசாயிகளின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாய பதிவு விபர எண் வழங்க தமிழக அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது.

News February 14, 2025

45 நாளில் 3 லட்சம் பேர் கண்ணாடி பாலத்திற்கு வருகை

image

குமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த 45 நாட்களில் 3 லட்சம் பேர் கண்ணாடி கூண்டு பாலத்தை நேரில் பார்வையிட்டு அதில் நடந்து சென்றுள்ளனர். இது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

News February 14, 2025

குமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்

image

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து இன்று குமரி கடற்கரையில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். அவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். இதில் அத்துமீறிய ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

News February 14, 2025

குமரியில் 22,044 பேர்  10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். இதில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 283 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 761 பேரும் இந்த தேர்வினை எழுதுதவுள்ளனர்.

News February 14, 2025

குமரியில் 22,461 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்!

image

பிளஸ் 2 தேர்வு வரும் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 461 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11,565, பேரும் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10,896 பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.

News February 14, 2025

நாகர்கோவில் புத்தக கண்காட்சியில் ஒரு லட்சம் புத்தகங்கள்!

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று கூறியதாவது, நாகர்கோவில் 6வது புத்தக கண்காட்சி வரும் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 3ஆம் தொகுதி வரை நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 1 லட்சம் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றுள்ளார்.

News February 14, 2025

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்!

image

வேளாண் கார்கள் திட்டத்தின் கீழ் நிழல் தரக்கூடிய மரங்கள் மற்றும் தடி மர வகை நாட்கள் இலவசமாக நாகர்கோவில் சமூக காடுகள் சரகம் மூலம் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகனி, தேக்கு, ஈட்டி, செம்மரம், சவுக்கு போன்ற கன்றுகள் வழங்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!