Kanyakumari

News October 13, 2025

தக்கலையில் 24 வாகனங்கள் பறிமுதல்

image

தக்கலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் அசோக் தலைமையிலான போலீசார் தக்கலை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் ஓட்டி வந்த பதினெட்டு சக்கரங்களை கொண்ட இரண்டு லாரிகள், டெம்போ-02, கார்கள்-8, ஆட்டோ-01 மற்றும் இருசக்கர வாகனங்கள்-11 என மொத்தம் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

News October 13, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

image

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக்.13) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 40.02 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 58.76 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 5.90 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 6.20 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 617 கனஅடி, பெருஞ்சாணிக்கு 379 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News October 13, 2025

குமரி: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News October 13, 2025

குலசேகரம் அருகே பற்றி எரிந்த கார்

image

அரமன்னம் பகுதியை சேர்ந்த ரவீந்திரன்(52) அக்.11 அன்று காரில் குலசேகரத்துக்கு சென்று விட்டு காரை வீட்டில் நிறுத்தி இருந்தார். பின்னர் இரவில் கார் திடீரென தீபிடித்து எரிந்ததுள்ளது. தகவல் அறிந்த குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன் பகுதி முழுவதும் சேதமடைந்தது. குலசேகரம் போலீசார் ரவீந்திரன் அளித்த புகாரின்படி விசாரணை நடத்தி வருகின்றனர். 

News October 13, 2025

கன்னியாகுமரியில் ரூ.1 கோடி மானியம்

image

வேளாண் விளை பொருள் மதிப்பு கூட்டு அலகுகள் அமைக்க குமரி மாவட்டத்திற்கு ரூ.1 கோடி இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆர்வமுள்ள வேளாண் தொழில் முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுடைய விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் தொழில் முனைவோருக்கு தொழில் திட்டத்திற்கேற்ப மானியம் வழங்கப்படும் என்று வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 13, 2025

குமரியில் ஒரு வருடத்தில் 407 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த வருடத்தில் மட்டும் 220 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 407 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 136 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வழக்குடன் தொடர்புடைய 35 இருசக்கர வாகனம் மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News October 12, 2025

குமரி: 560 லிட்டர் மண்ணெண்ணை பறிமுதல்

image

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் பாரதி தலைமையில் உள்ள குழுவினர் சுவாமியார்மடத்தில் இன்று ரோந்து பணியில் இருந்தனர்.
சாலையோரம் பதுக்கி வைத்திருந்த 35 லிட்டர் கொள்ளளவு உள்ள 16 பிளாஸ்டிக் கேன்களில் 560 லிட்டர் பொது வினியோக திட்ட மண்ணெண்ணை கேரளா மாநிலத்திற்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணை மார்த்தாண்டம் அரசு கோடவுனில் ஒப்படைக்கப்பட்டது.

News October 12, 2025

குமரி: வேலை நாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக் 17ம் தேதி காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. 8th, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து Candidate Login –ல் பதிவு செய்ய வேண்டும்.

News October 12, 2025

குமரியை சேர்ந்தவருக்கு கலைமாமணி விருது

image

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை சேர்ந்த வழக்கறிஞர், ஓவியர், திரைப்பட விமர்சகர் போன்ற பன்முகத் தன்மை கொண்ட வே.ஜீவானந்தத்திற்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அறிவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் ஜீவானந்தனுக்கு கலைமாமணி விருதினை வழங்கி சிறப்பித்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News October 12, 2025

குமரி: வங்கி வேலைக்கு இன்றே கடைசி

image

குமரி மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. விண்ணப்பிக்கெ இன்றே 12.10.2025 கடைசி தேதியாகும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!