India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை (ஏப்.3) முதல் ஏப்.4 வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 டெலிகாலர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 51 வயது வரை உள்ள பெண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக 15 ஆயிரம் வழங்கப்படும் . விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <
நெல்லை மேட்டுக்குடியைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவர் ஆக்கர் சேகரிக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆனா நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். குடிப்பழக்கம் உடையவராக இருந்த இவர் புது கிராமம் காலணியில் வீட்டில் மாடியில் தூங்கச் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் நேற்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இது ஆண்டை ஓப்பிடும் பொழுது குறைவு ஆகும் என்று குறிப்பிட்டார். தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்! விபத்தை தவிருங்கள்!!
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 106 உயிரிழப்பு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு இது வரையிலும் 49 உயிரிழப்பு விபத்துகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது பாதிக்கு மேல் குறைவாகும் என்று கூறியுள்ளார்.
கோடை காலத்தையொட்டி கால்நடைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்தியில்; கால்நடைகளை கால்நடை வளர்ப்போர் நிழல் தரும் கூரையின் அடியிலோ அல்லது மர நிழலிலோ கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும். கால்நடை தீவனங்களை வெட்டி வெளியில் போடக்கூடாது.முற்றிலும் அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்து உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருவதாக எஸ்.பி. ஸ்டாலின் இன்று (ஏப்.01) தெரிவித்தார். விபத்து உயிரிழப்புகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டம் என்ற காவல்துறையின் குறிக்கோளை அடைய காவல்துறை எடுக்கும் முன்னெடுப்புகள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இன்று ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகச்சாலை கிட்டங்கியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு தானியங்களாக அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் இருப்பு பதிவேடுகள் ஊழியர்களின் வருகை பதிவேடு கிட்டங்கியின் அடிப்படை வசதிகள் உள்ளித்தவற்றையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி என்பவர் தோவாளை மாணிக்க மாலை மற்றும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்து இருந்த நிலையில்,இன்று தோவாளை மலை மற்றும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.நம்ம ஊரு பெருமையை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க…
தென்முனையில் தனித்துவமான கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயருக்கு பின்னாலும் ஒரு சுவாரசியம் உள்ளது.கன்னி-குமரி என்றால் திருமணமாகாத பெண் என்று பொருள்.இங்குள்ள பகவதி அம்மன் சிவ பெருமானை திருமணம் செய்ய காத்திருந்தமையால் இப்பெயர் பெற்றது என கூறப்படுகிறது.ஆங்கிலேயர்கள் இந்த பகுதியை கேப் குமாரின் என்று அழைத்து வந்தனர்.கேப் என்றல் மூன்று பக்கம் கடல் சூழ்ந்த பகுதி,குமாரின் என்றால் குமரி என்று பொருள்.
Sorry, no posts matched your criteria.