India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மக்களே, உங்கள் வீடு/நிலத்திற்கு தெளிவான வரைபடம் (FMP) இல்லையா? இடம் நீளம், அகலம் தெரியாமா கவலையா? இனிமேல் அவசியமில்லை! இங்கு <

கொல்லங்கோடு போலீசார் மிக்கேல் காலனிபுரம் பகுதியில் நேற்று (அக்.13) வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 1,200 லிட்டர் மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. காரில் மண்ணெண்ணையுடன் 37 கேன்களை பறிமுதல் செய்த போலீசார், கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த அமீன் (38), ஷாஜகான் (39) ஆகியோரை கைது செய்தனர்.

கடந்த வாரம் குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த +2 மாணவர் சுர்ஜின் (17) அவரது நண்பர்கள் அஸ்வின், ரிஜோ ஆகியோருடன் பைக்கில் செல்லும் போது வெள்ளியாகுளத்தில் மரத்தில் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுர்ஜின் நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே உள்ள விவசாயியான ஜெனிஷ் என்பவருடைய தோட்டத்தில் ஒரு ஆளின் அளவு நீளமுடைய சுமார் 40 கிலோ எடை கொண்ட மரவள்ளிக்கிழங்கு இயற்கை முறையில் விளைந்துள்ளது. ஜெனிஷின் வீட்டில் இன்று (அக். 13) பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள இந்த அதிசய மரவள்ளிக்கிழங்கை அப்பகுதியில் சுற்றுவட்டார ஊர்மக்கள் பார்த்து செல்கின்றனர்.

குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் சேர்க்கை பெற கால அவகாசம் 17-10-2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்கள் 14 முதல் 40 வயது வரை, பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்று அதில் அவர் கூறியுள்ளார்.

குமரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <

குமரி மாவட்டத்தில் இன்று (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் : கொல்லங்கோடு நகராட்சியில் 22, 23, 24 வார்டுகளுக்கு ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியத்திலும், திங்கள் நகர் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை குமார் திருமண மண்டபத்தில் வைத்தும், முன்சிறை- குளப்புறம் பகுதிகளுக்கு கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடத்தில் மேலும் ராஜாக்கமங்கலம் மருங்கூர் பேரூராட்சியில் நடைபெற உள்ளது. SHARE!

குமரி மாவட்டத்தில் இன்று (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் : கொல்லங்கோடு நகராட்சியில் 22, 23, 24 வார்டுகளுக்கு ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியத்திலும், திங்கள் நகர் பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 8 வரை குமார் திருமண மண்டபத்தில் வைத்தும், முன்சிறை- குளப்புறம் பகுதிகளுக்கு கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடத்தில் மேலும் ராஜாக்கமங்கலம் மருங்கூர் பேரூராட்சி பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

தமிழக மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் கீழ் Block Coordinator, Case Manager மற்றும் Security, Office Helper போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு 1096 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th முதல் டிகிரி வரை படித்தவர்கள் இங்கே <

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.