Kanyakumari

News October 25, 2025

குமரி : ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

குமரி மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 25, 2025

குமரியில் காலை 8 மணிக்கு இங்கெல்லாம் கரண்ட் கட்!

image

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (அக். 25) நடைபெற உள்ளது. எனவே காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவே உங்க பணிகளை வேகமாக 8 மணிக்குள்ள முடிங்க…SHARE!

News October 24, 2025

குமரியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது எப்படி?

image

நாகர்கோவில் ஆயுதப்படை சாலையில் அருள்ஜீவன் என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கேரளாவில் இருந்து குட்கா கொண்டுவந்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் பேரில் எஸ்.ஐ. ஜெஸி மேனகா கேரளா சென்று குடோனில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள குட்கா, 2 கார்கள், 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

News October 24, 2025

குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் போக்குவரத்து மாற்றம்

image

தெற்கு ரயில்வே செய்திகுறிப்பு: மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் எண் 12666 கன்னியாகுமரி ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியிலிருந்து அக்25ம் தேதி காலை 5.50 மணிக்கு புறப்படுவது விருதுநகர், மானா மதுரை, காரைக்குடி திருச்சி Jn. வழியாக செல்லும். மேலும் மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ஜங்ஷன் செல்லாது. கூடுதலாக சிவகங்கை, புதுக்கோட்டையில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது

News October 24, 2025

குமரி மாவட்ட விவசாயிகள் வேதனை

image

குமரி மாவட்டத்தில் முதல்போக நெல் சாகுபடியான கன்னிப்பூ சாகுபடி கடந்த மே மாதம் தொடங்கியது. இதில் 5,600 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இதுவரை 5000 எக்டேரில் நெல் அறுவடைப்பணிகள் நிறைவடைந்துள்ளது. 600 எக்டேரில் அறுவடைப் பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. அதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது என அதிகாரிகள் கூறினர்.

News October 24, 2025

குமரி: ஆடுகளை திருடிய 2 பேர்

image

2 நாள் முன்பு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த, வெள்ளமடம் காண்டிராக்டர் சுப்பிரமணியனின் 2 ஆடுகளை  பைக்கில் வந்த 2 பேர் திருடிச்சென்றனர். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து ஆரல்வாய் மொழி எம்.ஜி.ஆர். நகர் விஜயகுமார் என்ற விஜய்(28), செண்பகராமன்புதூர் இசக்கிமுத்து என்ற அஜய் (24) ஆகிய 2 பேரையும்  நேற்று கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

News October 24, 2025

குமரி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற ஒரு வழி இருக்கு! ஆம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News October 24, 2025

குமரி: கால்வாயில் விழுந்து வாலிபர் பலி

image

ஆரல்வாய்மொழி மாதவாலயம் காதர்ஷாபுரம் சமையல் தொழிலாளி முகமது ரிஸ்வான்(32)  இவர் நேற்று  மதியம் செண்பகராமன் புதூரை அடுத்த கண்ணன்புதூர் சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் பைக்கில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி  பைக் கால்வாயில் பாய்ந்தது. இதில் நீரில் மூழ்கி முகமது ரிஸ்வான் உயிரிழந்தார். இதுக்குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். 

News October 24, 2025

குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

image

கன்னியாகுமரி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (அக். 25) நடைபெற உள்ளது. ஆகையால் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மயிலாடி, சுசீந்திரம், கீழமனக்குடி, சின்ன முட்டம், சுவாமிதோப்பு, அஞ்சுகிராமம், தேரூர், மருங்கூர், புதுக்கிராமம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE!

News October 23, 2025

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் இன்று (அக். 23) நடைப்பெற்றது. உடன் மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். முகாமில் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகளிடம் கடந்த காலத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

error: Content is protected !!