Kanyakumari

News April 12, 2025

தெப்பக்குளத்தில் மூழ்கி தவில் வித்வான் உயிரிழப்பு

image

பூதப்பாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சுபாஷ் (42). தவில் வித்வானான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று மாலை பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது தெப்பக்குளத்தில் இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா?

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்.12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச் இலவசமாக செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் உங்களது நண்பர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News April 11, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

அம்பேத்கர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் முன்னதாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட அனைவரும் சமத்துவ நாள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

News April 11, 2025

சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி 

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டான சித்திரை மாதம் ஒன்றாம் தேதி சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டான ஏப்.14 அன்று சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. மேலும் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டும் நடைபெற உள்ளது.

News April 11, 2025

நாகர்கோவிலில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

image

நாகர்கோவிலில் செயல்படும் தனியார் சாப்டுவேர் நிறுவனத்தில் 50 ஆராய்ச்சி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளங்கலை பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 11, 2025

குமரியில் 20,000 அரசு ஊழியர்களுக்கு ரூ.85 கோடி சம்பளம்

image

குமரி மாவட்டத்தில் பணியாற்றும் 20,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.85 கோடி சம்பளம் வழங்கப்படுவதாக கருவூலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதி ஆண்டில் மாதம் ஒன்றுக்கு ரூ.85.41 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டு ஒன்றுக்கு 1025.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

குமரியில் கண்பார்வை குறைபாடு தீர்க்கும் கோயில்

image

சுசீந்திரம் அருகே ஆஸ்ராமத்தில் கண்பார்வை குறைபாடு நீக்கும் கண்டன் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.முன்னொரு காலத்தில் கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட யாரோ ஒருவர் அவர் கண்ணில் மையை தடவியுள்ளார். பின்னர் அவருக்கு பார்வையும் வந்துள்ளது. கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் “அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா’ என்று பெயருடன் அழைக்கப்படுகிறார்.

News April 10, 2025

கன்னியாகுமரி: அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் விண்ணப்பிக்க இன்றே(ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 10, 2025

குமரி கடலில் பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு – எச்சரிக்கை

image

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பேரலைகள் எழுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய கடல் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேரலைகள் அடிக்கடி எழும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 9, 2025

கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

image

பண்டிகையை கால கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சேலம், நாமக்கல், மதுரை வழியாக சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் (வ. எண் 06089 ) ஏப்ரல் 10 &17 ஆகிய இரு தினங்களிலும் சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரி புறப்படும் மறுமார்க்கத்தில் (வ.எண் 06090 ) ஏப்ரல் 11 & 18 கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் என அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!