India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் பி எம் கிஷான் பயனாளிகளில் இதுவரை ஒரு லட்சத்து 2000 பயனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 20,000 அடையாள எண் பெறாத பிஎம் கிஷான் விவசாயிகள் இம்மாதம் 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதிலும் பதிவு செய்யாத விவசாயிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும் என குமரி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,ஆட்சியர் அலுவலகம் : 04652 – 279090,279091, காவல் – 100, விபத்து – 108, தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு -1091 என்ற உதவி எண்களில் அழைக்கலாம்.
கிள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் எலக்ட்ரீசியன் ராஜேஷ். இவரது உறவினரின் மகள் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்கு ராஜேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுந்தரய்யா நேற்று ராஜேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட தியாகி கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தில் மார்சல் நேசமணியின் போர்ப்படைத் தளபதியுமாக விளங்கிய பொன்னப்ப நாடாருக்கு நாகர்கோவிலில்ரூ.50 லட்சம் செலவில் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. அவரது நூற்றாண்டைய ஒட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறந்த உள்ளூர் உணவுகளாக கருதப்படும் இவை கேரள மாநிலத்தினுடன் ஒத்து போனது. ஆகையால் இது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே கிடைக்க காரணமாக அமைந்துள்ளது.
▶️தேன் குழல்
▶️ஓலம்
▶️எரிசேரி
▶️கலத்தப்பம்
▶️நெய்அப்பம்
▶️அச்சப்பம்
▶️மடக்குசான்
▶️குழல் அப்பம்
▶️சுக்கப்பம்
▶️பூரியான்
▶️கிண்ணத்தப்பம்
▶️சக்கோலி
*ஷேர் பண்ணுங்க (இதில் விடுப்பட்ட ருசியான உணவுகளை நீங்கள் கூறலாம்)
கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு அணைகள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.34 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி அணைகள் பாசனத்திற்காக திறக்கப்படுவதற்கு முன்பு கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க நீர் வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தை சேர்ந்த ஹரிதாஸ்,அனுஷா தம்பதியினர் தங்கள் உறவினர்களுடன் நேற்று கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். இன்று காலை அவர்கள் தங்கி இருந்த விடுதியில் அறையில் சாவியை மறந்து வைத்துவிட்டு வெளியே சென்றவர்கள் திரும்பி வந்தபோது சாவியை எடுப்பதற்காக விடுதி உதவியாளருக்கு உதவி செய்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்து கணவன், மனைவி உயிரிழந்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், போலீசாருடன் இணைந்து பொதுமக்கள் ஊர் தெருக்களில் கிராமத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வண்ணம் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களின் அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா என்ற நிலை விரைவில் எட்டப்படும் என்று கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.