India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரிமாவட்டத்தில் நேற்று 12 தனி பிரிவு போலீசார் மாற்றப்பட்டு உள்ளனர். ஆசாரிப்பள்ளம் அசோக்குமார் கோட்டாருக்கும் கோட்டாறு சாரதி நேசமணி நகருக்கும் மாற்றப்பட்டுள்ளார். ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு ஜெய்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் தக்கலை, வெள்ளி சந்தை, குளச்சல், கொற்றி கோடு உட்பட 12 போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய தனிப்பிரிவு காவலர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில் நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் ஒரு வழக்கிலிருந்து நாகர்கோவிலை சேர்ந்த சந்தை ராஜன் என்பவரை விடுவிக்க 1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷை நெல்லை சரக டி.ஐ. ஜி.நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

1. மாநில கட்டுப்பாட்டு அறை 1070
2. மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077
3. மாவட்ட ஆட்சியர்அலுவலகம் 04652 – 279090,279091
4. தீ தடுப்பு, பாதுகாப்பு 101
5. குழந்தைகள் பாதுகாப்பு 1098
6. பேரிடர் கால உதவிக்கு 1077
7. பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
8. இந்திய தொலை தொடர்பு துறை உதவி 1500
9. மாவட்ட கட்டுப்பாட்டு அறை (கோவிட் – 19) 04652-1077 , 231077.
பயனுள்ள தகவலை SHARE பன்னுங்க.

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்<
2. அட்டை பிறழ்வுகள் தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

முட்டத்திலிருந்து கடந்த 19ஆம் தேதி 23 பேர் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.49 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மேற்கு வங்கத்தை சேர்ந்த தாகூர் தாஸ் என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் 1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஸ்டாலின் இன்று உத்தரவிட்டு உள்ளார்.

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உதவி ஆய்வாளர்கள் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். னேலும் 5 பேர் மற்ற காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் அழகுமீனா பேசியதாவது:- மாவட்டத்தில் விளைநிலைங்களில் அதன் சொந்தக்காரர் வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கலாம். விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற அனுமதிக்கக்கூடாது. 2017-ம் ஆண்டுக்குப்பிறகு 12 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை காணாமல் போய்விட்டது. தற்போது 45 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தான் பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: அமெரிக்க சுங்க விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட 2 மாத இடை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் அமெரிக்காவுக்கு அனைத்து வகை அஞ்சல் சேவைகளையும் இந்தியா தொடங்கியுள்ளது.அமெரிக்காவுக்கு அனுப்பபடும் பார்சல்கள் மீதான அனைத்து பொருந்தக்கூடிய இறக்குமதி வரிகளும் முன்கூட்டியே வசூலிக்கபடும்.
Sorry, no posts matched your criteria.