Kanyakumari

News April 13, 2025

குமரி : பைக் திருடிய 2 பேர் கைது

image

குழித்துறை பகுதியில் பைஜு என்பவரின் உயர்ரக  பைக் திருட்டு போனது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராகுல் சந்திரன் மற்றும் சுதீஷ் ஆகிய இருவரும் பைக்கை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை மார்த்தாண்டம் போலீசார்  கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

News April 12, 2025

குமரி: திருமலை திருப்பதி கோயிலில் 7000 லட்டுகள் ரெடி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் சித்திரை தமிழ் புத்தாண்டு முன்னிட்டு வழக்கம்போல் 7000 லட்டுகள் விற்பனைக்கு உள்ளது எனவும் அன்று மதியம் அன்னதானமும் நடைபெறும் என நிர்வாகித்தனர் தெரிவித்தனர். சுப நிகழ்ச்சிகளுக்கு கோயில் மண்டபம் குறைந்த வாடகைக்கு கொடுக்கப்படும் என்று பொதுமக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர். *ஷேர் 

News April 12, 2025

திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் 5 நாட்கள் ஆய்வு – ஆட்சியர்

image

அய்யன் திருவள்ளுவர் சிலை மற்றும் சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலம் கட்டுமானத்தின் பராமரிப்பு பணியை M/S ரைட்ஸ் நிறுவனம் (மத்திய பொதுத்துறை நிறுவனம்) அண்ணா பல்கலைக்கழகம், தூத்துக்குடி ஆகிய நிறுவனங்கள் 15.04.2025 முதல் 19.04.2025 வரை ஐந்து நாட்கள் ஆய்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News April 12, 2025

தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி நாகர்கோவில் வருகை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாநிலங்களில் இருந்து அரிசி வந்து கொண்டிருக்கிறது. இன்று தெலுங்கானாவில் இருந்து 2,650 டன் அரிசி இன்று சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து அவை லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு பள்ளி விளையில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கிக்கு கொண்டு சென்று இருப்பு வைக்கப்பட்டது.

News April 12, 2025

அதிமுக, பாஜக கூட்டணி இயற்கையான கூட்டணி – விஜயதரணி

image

அதிமுக மற்றும் பா.ஜ. கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. பொதுமக்களிடையே பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டணி வரும் தேர்தலில் நிச்சயமாக மகத்தான வெற்றியைப் பெறும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றி கூட்டணி அமைத்துள்ளார். தமிழகத்திற்கு அவரது வருகை வெற்றிக்கு அடையாளமாக உள்ளது என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

அதிமுக செய்த நலத்திட்டங்களுக்கு மீண்டும் மக்கள் வாக்களிப்பர்

image

அதிமுக ஆட்சியில் பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தத் திட்டங்களுக்காக மக்கள் மீண்டும் அதிமுக, பா.ஜ., கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் தேர்தலை சந்திக்கும் என்பதால் அதிமுக, பா.ஜ.க கட்சியினரிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது என கன்னியாகுமரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

News April 12, 2025

அடையாள அட்டைப் பெறாவிட்டால் பிரதமர் கவுரவ நிதி நிறுத்தப்படும் 

image

குமரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இனிவரும் காலங்களில் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவமான அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குமரியில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 782  கிஷான் பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 22 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெறவில்லை. பதிவு செய்யாத இந்த விவசாயிகளுக்கு அடுத்த தவணை உதவித்தொகை நிறுத்தம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

News April 12, 2025

குமரி கிழக்கு கடலில் மீன்பிடிக்க தடை  – ஆட்சியர்

image

மீன் வளத்தை பாதுகாத்திடும் பொருட்டு ஏப்.15 முதல் ஜூன்14 வரை 61 நாட்களுக்கு கிழக்கு கடலோரப் பகுதிகளில் இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில், வழி வலைவிசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி மீன்பிடிப்பில் ஈடுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2025

JUST IN கன்னியாகுமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 12, 2025

கன்னியாகுமரியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

image

கன்னியாகுமரியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் சில்லறை விற்பனை கூட்டாளர், சூப்பர்வைசர் உள்ளிட்ட 65 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்பட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!