India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களாக மலைத்தேனீக்கள் படையெடுத்து வந்து நோயாளிகளை தாக்கியுள்ளது. இதில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் படுகாயமடைந்தனர். இதனால் நேற்று மாலை அங்கு சிசிச்சைபெற்று வந்த 5 பேர் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். குலசேகரம் G.H-ல் உள்நோயாளிகள் வார்டு பூட்டப்பட்டது. குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் தேனீக்களை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

குமரி மக்களே, தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) காலியாக உள்ள 1429 Health Inspector Grade-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th தேர்ச்சி பெற்ற 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.16க்குள் இங்கு <

குமரி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு:- தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலோ, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தலோ வருவாய் மற் றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை 1077, 04652 231077, 9384056205 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE!

கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் அறுவடை இயந்திரத்தை நேற்று சுத்தம் செய்த கொண்டிருந்த வாலிபர் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த ஆரல்வாய் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள குழித்தோடு பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவரது 1¼ வயது மகன் கேசங்கின் கால், பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய், சத்தம் கேட்டு ஓடி வந்து மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த தக்கலை தீயணைப்பு வீரர்கள், நாற்காலியின் அடிப்பகுதியை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

கூடலூர் பகுதியில் அட்டகாசம் செய்து 12 பேரை கொடூரமாக கொன்ற ராதா கிருஷ்ணன் யானை கடந்த 23ஆம் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. இந்த யானை நேற்று இரவு முதுமலையில் இருந்து லாரி மூலம் நேற்று இரவு காலர் ஐடி பொருத்தப்பட்டு கோதையாறு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு விடப்பட்டது. ஏற்கனவே கோதையாறு வனப்பகுதியில் பலரைக் கொன்ற அரி கொம்பன் யானை விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சென்ட்ரலில் இருந்து (06053) நாகர்கோவிலுக்கு இம்மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 4:15 மணிக்கு புறப்பட்டுச் செல்வதாக இருந்த ரயில் அன்று ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதைப் போன்று நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு 28 ஆம் தேதி காலை 9 .15 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Eklavya Model Residential Schools (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

குமரி மக்களே, இனி உங்க மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..
1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க
2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.
3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.
4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.