Kanyakumari

News February 12, 2025

குமரியில் 24 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பம்

image

குமரி மாவட்டத்தில் 24 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், விண்ணப்பிக்க விரும்புவர்கள் புதிய மினி பேருந்துக்கான விண்ணப்ப படிவத்தினை Pari Vahanமூலமாக விண்ணப்பித்து ஆன்லைனில் கட்டணம் 1600 செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் இம் மாதம் 17ஆம் தேதி முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 12, 2025

கனரக வாகன ஓட்டிகளுக்கு எஸ். பி. எச்சரிக்கை

image

குமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ் பி ஸ்டாலின் Iபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சாலைகளில் செல்லும்போது கனரக வாகனங்களில் 16 டயர்கள் பயன்படுத்த வேண்டும் என்ற உத்தரவை மீறி இயக்கப்பட்ட 21 வாகனங்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

News February 12, 2025

சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்பு

image

டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியர் கோர்ட்டு அசிஸ்டெண்ட் பதவிக்கு 241 காலிபணியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, (25 ஆங்கிலவார்த்தைகள்/ நிமிடம்) தட்டச்சு திறன், அடிப்படை கணினி அறிவு ஆகியன. இதற்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை. தேர்வு நடைபெறும் இடங்கள்: மதுரை, சேலம், நெல்லை, குமரி, திருச்சி, சென்னை, கோவை. விண்ணப்பிக்க கடைசி தேதி: 8.3.2025. <>*ஷேர்<<>>

News February 12, 2025

மாணவனுக்கு வாழ்த்து தெரிவித்த மேயர்

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை அரசு உயர்நிலை பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவன் S.முகமது அப்துல்லா சிலம்பு ஆட்டத்தில் இரட்டை கம்பு சுற்று போட்டியில் தொடர்ந்து 2 மணி 45 நிமிடம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்துள்ளார். இதை அடுத்து இன்று (பிப். 12) மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ.மகேஷ் மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வெற்றி பெற்ற சான்றிதழினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

News February 12, 2025

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் (பிப்ரவரி 14) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10, +2, ஐ.டி.ஐ டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் பங்கேற்க விரும்புவோர் <>(இங்கே கிளிக் செய்து)<<>> என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவிப்பு. *வேலை தேடும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்*

News February 12, 2025

காமராஜர் கல்வெட்டு உடைந்தது எப்படி; புதிய தகவல்

image

மாத்தூர் தொட்டி பாலத்தின் முன் பகுதியில் இருந்த காமராஜரின் கல்வெட்டு நேற்று உடைந்த நிலையில் கிடந்தது. இதனை யாரோ விஷமிகள் உடைத்து விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அதிவேகமாக கல்வெட்டுடன் மோதியதில் கல்வெட்டு உடைந்தது தெரியவந்துள்ளது/ அந்த நபரை பிடிக்க திருவட்டாறு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

News February 12, 2025

குமரி அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் இருந்து தூசிகள் அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லாத வகையில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.

News February 12, 2025

திரைப்பட படப்பிடிப்பை துவக்கி வைத்த MLA!

image

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சிக்குட்பட்ட திற்பரப்பு அருவியில் வைத்து நேற்று (பிப். 11) இயக்குனர் செல்வகுமாரன் தலைமையில் நெஞ்சில் மாமழை என்ற திரைப்படம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக விலவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு படப்பிடிப்பினை துவக்கி வைத்தார்.

News February 12, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 11 மணி -தேமுதிக இருபத்தைந்தாவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு இரண்டு இடங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. மாலை 5.30 மணி – நாகராஜா கோவில் 10ம் நாள் திருவிழாவையொட்டி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.  பகல் 1 மணி – அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் வழங்க கோரி ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உட்பட 8 கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது

News February 12, 2025

நாகர்கோவிலில் பாலியல் தொழில்; 3 பேர் அதிரடி கைது

image

நாகர்கோவில் ராமன்புதூர் லிட்டில் பிளவர் தெருவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மணிகண்டன்(25) என்பவர் புகாரளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் கிறிஸ்டி பிரபா(42), நண்பர் கார்த்திகேயன் மற்றும் மற்றொரு பெண்ணை கைது செய்தனர். மரைன் பயிற்சி நிறுவனத்திற்கு என வாடகைக்கு கட்டடம் எடுக்கப்பட்டு அதில் பாலியல் தொழில் நடைபெற்றுள்ளது என விசாரனையில் தெரியவந்துள்ளது

error: Content is protected !!