India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரி மாவட்டத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. மேலும் முன்னாள் மாவட்ட செயலாளர் அசோகன் ஏற்பாட்டில், 24 ஆம் தேதி அன்று ஆசாரிப்பள்ளம் மருத்துவ மனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 25 ஆம் தேதி தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ கலந்துகொண்டு தங்க மோதிரங்களை வழங்குகிறார் என அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மேம்பாலத்தில் உள்ள கண்ணாடிகளின் நடுவே ஒட்டப்பட்டிருக்கும் சிலிக்கான் சேதமடைந்திருப்பதால் அதனை விரைந்து சரிசெய்ய சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளன்.

கன்னியாகுமரி மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் வி.அகஸ்தியன் இன்று ( பிப்ரவரி 18 ) சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை அளித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.

குமரியில் அதிசய சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. பொதுவாக சாஸ்தா 2 கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு இடது கால் பெருவிரலை தரையிர் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் சாஸ்தா இல்லை. கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.*SHARE IT*

திரிபுரா மாநில ஆளுநர் இந்திர சேனா ரெட்டி இன்று(பிப்.18) இரவு 8-30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து கார்மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கு உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் இரவு அங்கு தங்குகிறார். நாளை (பிப்19) காலை 10 மணிக்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.

குமரி மாவட்டத்தில் பொது இடத்தில் இருந்து மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 15 நாளில் மட்டும் 315 பேர் மீது பொது இடத்தில் இருந்து மது அருந்தியதாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் நாளை புத்தகக் கண்காட்சி தொடங்குகிறது. மார்ச் 1ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக பள்ளி வளாகத்தில் அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த அரங்குகளை நேற்று அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த புத்தகக் கண்காட்சியில் 1 லட்சம் புத்தகங்கள் வரை இடம்பெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

#இன்று(பிப்.18) காலை 9 மணிக்கு ரெஜின் முந்திரி தொழிற்சாலையில் 30 பேருக்கு ஒரு வருடமாக வேலை வழங்காததை கண்டித்து மாறப்பாடியில் சிஐடியு முந்திரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 11 மணிக்கு கோணம் TNCSC அலுவலகம் முன்பு சலுகைகள் வழங்க கோரி சுமை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5.45 மணிக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கும் வாரம் இருமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மும்பையில் இருந்து மார்ச் 10,12 & 17ஆம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதே போன்று நாகர்கோவிலில் இருந்து 11,13 & 18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நெல்லை வழியாக இந்த ரயில் செல்லும். SHARE IT.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிரபல ஹோட்டல் மற்றும் வீடுகளில் செயல்பட்டு வந்த ஸ்பா, ஆயுர்வேத மசாஜ் சென்டர்களில் நேற்று(பிப்.17) போலீசார் சோதனை நடத்தினர். அதில், வடசேரி மற்றும் நேசமணி நகர் பகுதி ஸ்பா, மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்தியதாக 7 பெண்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.