India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குளச்சலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகிற சட்டமன்றத் தேர்தலில் குமரி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவித்தார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் 2006 ஆம் ஆண்டு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி & ஊராட்சிகளில் பணிபுரியும், சொந்த வீடற்ற தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் குமாரபுரம் 288 அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டப்பகுதியில் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உட்பட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று கூறியதாவது, போதைப்பொருள் விற்பனை மாவட்டத்தில் தற்போது கட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை 94 கஞ்சா, 2 போதை மாத்திரை விற்பனை, ஒரு போதை ஊசி வழக்கு பதிவாகியுள்ளது. 30 கிலோ கஞ்சா, 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 160 பேர் கைதாகி உள்ளனர் என்றார்.
#இன்று(நவ.,13) காலை 8 மணிக்கு ராமன்புதூர் சந்திப்பில் இருந்து அண்ணா விளையாட்டரங்கம் வரை சிபிஐஎம் மத்திய அரசை கண்டித்து வாகன பிரச்சாரம். #10 மணிக்கு குமரி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியில் அஞ்சல் துறை சார்பில் கருத்தரங்கம். #குமரி கருத்தரங்கம். #திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவம் விழா.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில், பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஒளஷதி கேந்திர திறப்பு விழா நாளை (நவ.13) காலை 10 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இதனை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
குமரியில் 1330 குறள் தந்த ஐயன் திருவள்ளூர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளன. இதையடுத்து, வெள்ளி விழா கொண்டாட கூடிய வகையில் வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு தேதிகளில் வெள்ளி விழா நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளாக கோட்டார் கவிமணி அரசு தொடக்கப்பள்ளி, சொத்தவிளை அரசு நடுநிலைப்பள்ளி, சுசீந்திரம் அரசு நடுநிலைப்பள்ளி ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளன. பள்ளியின் கட்டமைப்பு, மாணவர்களின் கற்றல் திறன், புதிய உத்திகளை கடைபிடித்தல் உட்பட பல்வேறு தரக்குறியீடுகளின் அடிப்படையில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி நேற்று(நவ.,11) கூறியுள்ளார்.
குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்டுள்ள ஸ்கூட்டர் பெற்று ஓட்டுநர் உரிமம் வாங்காமல் உள்ள மாற்றுத் திறனாளிகள் நவ.,20-க்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆர்.சி.புக், இன்ஸ்யூரன்ஸ், போட்டோ, ஆதார் உட்பட உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். SHARE IT.
அதிமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு நடத்துவதற்கு மேலிட நிர்வாகிகளை கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நியமித்துள்ளார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வுக்காக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, அருணாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கள ஆய்வு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்.
ஆசாரிப்பள்ளத்தில் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மருத்துவப் பிரிவுகள் செயல்படுகின்றன. தினமும் 2,000 வெளி நோயாளிகள், 1,000 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோயாளிகள் உள்ளிட்ட பல்வேறு நோயாளிகளுக்காக இந்த ஆண்டு இதுவரை ரூ.12 கோடி மதிப்பில் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என மருத்துவத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.