India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தனது முயற்சியால் உடைத்தெறிந்து, இந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்களித்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 88வது நினைவு தினமான இன்று(நவ.,18), நாட்டுக்காக அவர் செய்த தியாகத்தை போற்றுவோம் என கன்னியாகுமரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் நாளை(நவ.,19) குமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். காலை 9.30 மணிக்கு குமரி அரசு சுற்றுலா மாளிகையில் பொது கணக்கு குழு கூடுதல் நடக்கிறது. பின் குமரியில் பல்வேறு இடங்களில் சென்று வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுகின்றனர். மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடக்கிறது.
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், கன்னியாகுமரி வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கே.விவேகானந்தன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தனர்.
குமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4-30மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12:30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதே போல் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை சீசனையொட்டி மதியம் 1 மணிக்கும் இரவு 9 மணிக்கும் அடைக்கப்படுகிறது. இதன்மூலம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 15 லட்சத்து 65 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இன்றும் இந்த முகாம் நடைபெறுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு முகாமில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் இதுவரை 5,183 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
குமரி கோடிமுனை பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஜூடின் தனது படகில் தனியாக மீன்பிடிக்க சென்ற நிலையில் நடுக்கடல் பகுதியில் அவரது படகு மின்னல் தாக்கிய உயிர் இழந்தார். இதையடுத்து உயிர் இழந்தவரின் குடும்பத்துக்கு குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேரில் வந்து மின்னல் தாக்கி உயிரிழந்த மீனவ கிராமத்தை சார்ந்த குடும்பத்திற்கு ரூ.2 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பெயரை பயன்படுத்தி இளைஞர்களிடம் பணம் பெற்று ஏமாற்றிய வழக்கில், ஊராட்சி மன்ற தலைவி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய ஊராட்சி தலைவியை மட்டும் ஜாமீனில் விடுவித்த நிலையில், மற்ற இருவரையும் விசாரணைக்கு பின்னர் போலீசார் நேற்று(நவ.,16) சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாட்டில் இன்று(நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்தி பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன்னேற்பாடுடன் செல்வது நல்லது. SHARE IT.
குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1,2 அணைகளில் முறையே 14.99 மற்றும் 15.09 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 42.1அடி நீரும்,77அடி நீரும், 77அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் 65.24 அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்டல் அணையில் 25 அடி நீரும், 42.65அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.1 அடி நீரும் இருப்பு உள்ளது.
கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் நேற்று(நவ.,16) தொடங்கியது. இந்த சீசன் ஜனவரி 20ஆம் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இதையொட்டி யாகுமரி நகர பகுதி முழுவதும் 180 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே செயல்படாமல் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் சரிசெய்யப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SP சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.