Kanyakumari

News December 5, 2024

ரப்பர் விலை மீண்டும் சரிய தொடங்கியது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. சரிந்திருந்த ரப்பர் விலை அண்மையில் ஏறத் தொடங்கியது. நேற்று 100 கிலோ ரப்பர் 19 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்து வந்த நிலையில், இன்று திடீரென 100 ரூபாய் குறைந்து 19 ஆயிரத்து 800 ரூபாயாக குறைந்துள்ளது. ரப்பர் விலை உயர்ந்து வந்ததால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News December 5, 2024

SC/ST மக்கள் தொழில் தொடங்க கடன் – ஆட்சியர் தகவல்

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி ரூ.3.50 இலட்சம் அல்லது 35% மானியத்தொகையுடனும், PM AJAY திட்டத்தின் மூலம் தொழில் தொடங்கிட அதிகபட்சம் ரூ.1லட்சம் வரை கடனுதவி 50சதவீதமானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது என குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News December 5, 2024

குமரி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 54 பேர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பவர்கள், கஞ்சா விற்பவர்கள் மற்றும் ரவுடியிஷத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள். எஸ்பி சுந்தர வதனம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு இதுவரையிலும் மாவட்டத்தில் மொத்தம் 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News December 5, 2024

தங்கம் வென்று அசத்திய குமரி மாணவி

image

மலேசியாவில் நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும், இன்று மதியம் 1 மணிக்கு நடந்த 100 மீட்டர் தடை தாவலில் தங்கமும் வென்று அசத்திய குமரி மாணவி ஷமீஹாபர்வின் இந்தியாவுக்கும், குமரி மாவட்டத்திற்கும் மலையோர கிராமமான கடையொலுமூட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

News December 5, 2024

குமரி மாவட்டத்தில் 400 பேர் மீது வழக்குப்பதிவு

image

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 சப் டிவிஷனில் போலீசார் நேற்று இரவு முதல் இருசக்கர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்ததுடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்ற செயல்களுக்காக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

News December 5, 2024

ஆசிய நீளம் தாண்டுதலில் குமரி பெண்ணுக்கு வெள்ளிப் பதக்கம்!

image

மலேசியாவில் இன்று(டிச.,5) காலை நடந்த காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று, கன்னியாகுமரி மாவட்டம் கடையாலமூடு மலையோர கிராமத்தை சேர்ந்த ஷமீஹா பர்வின் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

News December 5, 2024

தோவாளை மலர் சந்தை இன்றைய விலை நிலவரம்

image

தோவாளை மலர் சந்தையில் இன்றைய(டிச.,5) மலர்கள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, பிச்சி ரூ.1,000, மல்லி ரூ.1,000, சம்பங்கி ரூ.200, அரளி ரூ.400, வாடாமல்லி ரூ.150, கோழி கொண்டை ரூ.150, துளசி ரூ.30, பன்னீர் ரோஜா ரூ.140, மஞ்சள் செவ்வந்தி ரூ.160, வெள்ளை செவ்வந்தி ரூ.300, கிரேந்தி ரூ.50, மரிக்கொழுந்து ரூ.150, தெத்தி ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News December 5, 2024

குமரி பெண்களுக்கு விருது: கலெக்டர் பாராட்டு

image

குமரியை சேர்ந்த கைவினை கலைஞர்களான ஜான்சி குரூஸ் மற்றும் சிவகுமாரி ஆகியோர் தேங்காய் சிரட்டை ஓட்டில் கலை பொருட்கள் தயாரித்ததற்காக, தமிழக அரசு விருது அறிவித்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு விருதை அமைச்சர் அன்பரசன் சமீபத்தில் வழங்கினார். இந்நிலையில் அந்த பெண் கைவினைக் கலைஞர்களை குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று(டிச.,4) நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.

News December 5, 2024

குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விவரம்

image

குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 285 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 185 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 465 கன அடியும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 350 கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணைக்கு 173 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

News December 5, 2024

ஆசாரிபள்ளம் E.N.T. பிரிவில் 20,592 பேருக்கு சிகிச்சை

image

ஆசாரிபள்ளம் GH காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் மாதம் 2,000 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆண்டு 20,592 பேருக்கு இந்த பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. காக்ளியர் இம்பிளாண்ட் (காதுவால் நரம்பு அறுவை) சிகிச்சை இதுவரை 76 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. விரைவில் 2 சிறுவர்களுக்கு காக்ளியர் இம்பிளாண்ட் சிகிச்சை செய்யப்படவுள்ளது என துறைத்தலைவர் சைரஸ் நேற்று கூறியுள்ளார்.

error: Content is protected !!