India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்த்தாண்டம் அருகே உள்ள நவுரிகாட்டு விளையில் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு இன்று (ஏப்.22) தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து நடத்திய அதிரடி சோதனையில் ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் முக்கிய குற்றவாளியாக முகேஷ் (47) என்பவர் சிக்கினார். மேலும்,இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் பிற அரசு துறைகளில் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கை மனுக்களை மீனவர்கள் முகாமின் போது நேரில் வழங்கலாம் என்று அதில் கூறியுள்ளார்.
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை “1800 599 1500” இந்த கட்டணமில்லா இலவச நமபரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE
மும்பை CST – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் எண். 16339 மும்பை CST – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 06, 07, 08, 10, 13, 14 ஆகிய தேதிகளில் இரவு 20.35 மணிக்கு மும்பை CST – புறப்படும். மே 15, 2025 குண்டக்கல், கூடி, ரேணிகுண்டா, திருப்பதி மற்றும் பகலா நிறுத்தங்கள் வழியாக அனந்தபூர், தர்மாவரம், கதிரி, மதனப்பள்ளி மற்றும் பைலர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்; குமரி மாவட்டத்தில் ஸ்டார் விளையாட்டு பயிற்சி மையத்தின் கீழ் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12 வயது முதல் 21 வயது வரை உள்ள மாணவ,மாணவிகள் இருபாலரும் சேரலாம். இதற்கான உடற்பகுதி தேர்வு 28ஆம் தேதி காலை அண்ணாமலையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது என்று அதில் அவர் கூறியுள்ளார். *ஷேர் பண்ணுங்க
குலசேகரன் புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய அண்ணன் இசக்கியப்பன். இவர்கள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தம்பியிடம் வீட்டை எனக்கு எழுதித்தருமாறு அவரது அண்ணன் கேட்டு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியப்பன் சுடலையாண்டியை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “குமரி மாவட்டத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 34 லட்சம் உத்தேச நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 50 சென்ட் விவசாய நிலம் உள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 26.86 லட்சம், ஆதி திராவிடர் இனத்தவருக்கு 6.80 லட்சம், பழங்குடி இனத்தவருக்கு 0.34 லட்சம் நிதி பெறப்பட்டு உள்ளது” என்றார்.
நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 100 படுக்கைகள் கொண்ட பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக 30 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவு 11 கோடியே 40 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலேயே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நாகர்கோவிலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக 42 கோடி 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நிறுவப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு பூதப்பாண்டியில் அரசு மருத்துவமனையில் இசிஜி கருவி அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். இந்த ரயில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த ரயிலில் பெரிதும் பயணம் செய்கின்றனர். இந்த ரயிலின் சேவையை தினசரி இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.