India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் நவ.3,4,6 தேதிகளில் ரேஷன்கடை விற்பனையாளர்கள், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை வழங்குவார்கள்.

சரலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். கட்டிட ஒப்பந்தக்காரரான இவரை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய கங்காதரன், சுகுமாரன், மனோஜ் பிரபாகர், தேவேந்திரன் ஆகிய 4 பேரை கோட்டாறு போலீசார் கைது செய்தனர். இவர்களில் கங்காதரன், மனோஜ் பிரபாகர், சுகுமாரன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி பரிந்துரைத்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார் .

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

குமரி மாவட்டம் தக்கலை அருகே வில்லுக்குறி பகுதியில் சுடுகாடு ஓரத்தில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் குமாரகோயில் அருகே பிரம்மபுரம் என்ற இடத்தை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (35) என்ற டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குமரி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <

கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல சிறந்த எழுத்தாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் (2024-2025)-ன் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விண்ணப்பங்களை https://www.tn.gov.in/form-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது படைப்பினை இரு நகல்களிலும், டிஜிட்டல் முறையிலும் அனுப்ப வேண்டும். கடைசி நாள்: 28.11.2025 ஆகும்.

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை கூலி தொழிலாளி சஜ்ஜார் ஜாஹீர் (49) . 2 நாள் முன்பு இவருக்கும், அவரது மனைவி ஜிபிரியாபீவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த சஜ்ஜார் ஜாஹீர் வீட்டின் அருகே விஷம் குடித்த நிலையில் கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.30) உயிரிழந்தார். கோட்டார் போலீசார் விசாரணை நடத்தினர்.

குமரி மக்களே, மத்திய அரசு கீழ்வரும் காவல்துறையில் காலியாகவுள்ள 7565 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12வது / டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் 18 – 25 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.40,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க <

பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் டேக்வாண்டோ மையத்தில் பயிற்சி ஆசிரியராக இருந்து பயிற்சி வழங்கி வந்துள்ளார். மதுரையில் நடந்த போட்டிக்கு மாணவிகளை அழைத்துச் சென்ற போது ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாணவியை மிரட்டி பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து மதுரைக்கு மாற்றம் செய்துள்ளனர்.

திருவட்டாறு அருகே மேக்கா மண்டபம் உடப்பன் குளத்தைச் சேர்ந்தவர் சுபின் (வயது 22) இவர் சென்னையில் பிளம்பிங் வேலை செய்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. நண்பருடன் சாப்பிடுவதாக கூறி விட்டுச் சென்றவர் உடப்பன் குளத்தில் இறந்த நிலையில் கிடந்தார். திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.