Kanyakumari

News December 11, 2024

ரப்பர் மரங்களுக்கான காப்பீடு செய்ய கடைசி நாள் டிச.,14

image

கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேளாண் காப்பீட்டு நிறுவன ரப்பர் வானிலை பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேரலாம். ஒரு ஏக்கருக்கு ரூ.608 செலுத்தினால் இழப்பீட்டுத் தொகையாக ரூ.12,146 தொகையாக அளவில் அதிகப்படியான மழை, வெப்பநிலையை பொறுத்து இந்திய வானிலை மையத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். Apply செய்ய கடைசி நாள்: டிச.,14.

News December 11, 2024

குமரி மாவட்ட அளவில் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

image

குமரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஹரிஹர சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது, 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான 25 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிக்கு வீரர்கள் தேர்வு நாகர்கோவில் இந்து கல்லூரி மைதானத்தில் டிச.,15 காலை 7 மணிக்கு நடக்கிறது. 1.9.1999-க்குப் பின் பிறந்த 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதார், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் வரலாம். மேலும் தொடர்புக்கு: 9944 496677.

News December 11, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

இன்று(டிச.,11) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிற்சாலை முன்பு மருத்துவமனைக்கு மருத்துவரை நியமிக்க வலியுறுத்தி 15வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.#காலை 10 மணிக்கு மணவாளக்குறிச்சி சந்திப்பில் ஆறான் விளை ஊர் பொதுமக்கள் சார்பில் IREL சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.#காலை 10 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

News December 11, 2024

அம்பேத்கர் சிலை திறப்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

image

தோவாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட இறச்சகுளம் அருள்ஞானபுரம் பகுதியில், தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக அம்பேத்கரின் 9 அடி உயர வெங்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை திறப்பதற்கான அழைப்பிதழை தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்க தலைவர் தினகரன் நேற்று(டிச.,10) சென்னையில் எடப்பாடி பழனிசாமியை வழங்கினார். இந்நிகழ்வில் குமரி எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News December 10, 2024

காஷ்மீரிலிருந்து குமரிக்கு சைக்கிள் பயணம் 

image

மும்பையைச் சேர்ந்த பிரணவ் ராவுத்(40), ஜூடூ டிசோசா(67) சச்சின் கவுலி(41) ஆகிய 3 பேர் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி காஷ்மீர் லால் சவுக் பகுதியில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்டனர். இவர்கள் பஞ்சாப், அரியானா, டெல்லி உள்பட 12 மாநிலங்கள் வழியாக 3750 கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் இன்று(டிச.10) கன்னியாகுமரி வந்து தங்களது சைக்கிள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

News December 10, 2024

குமரியில் பயிற்சி மருத்துவர் தற்கொலை முயற்சி

image

ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்தாம் ஆண்டு படித்து வரும் பயிற்சி மருத்துவர் சாருமதி, மன உளைச்சல் காரணமாக விடுதியில் இன்று பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வாந்தி எடுத்த அவரை உடன் தங்கி இருக்கும் ஜெபி என்பவர் மீட்டு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

News December 10, 2024

மீனவர்களுக்கு தனி அமைச்சரவை தேவை: விஜய் வசந்த் MP

image

குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த், மீனவர்களின் நலன் மற்றும் மீன்வள துறையை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் தனியாக ஒரு அமைச்சரவை தேவை எனக்கோரி பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்தார். 211 மீனவர்கள் 1172 படகுகள் பாகிஸ்தானிலும் 141 மீனவர்கள் 198 படகுகள் இலங்கையிலும், 95 மீனவர்கள் வங்கதேசத்திலும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

News December 10, 2024

குமரியை சேர்ந்தவர் M.S.UNIVERSITY செனட் உறுப்பினராக நியமனம்

image

நாகர்கோவிலை சேர்ந்தவர் சரவண சுப்பையா. வலு தூக்கும் சங்கம், தேசிய ஆணழகன் சங்கம், சிலம்பம் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர். 2025-26ம் ஆண்டில் சிவில் இஞ்சினியர் அசோசியேசன் தலைவராக உள்ளார். இவரை நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News December 10, 2024

பொது இடத்தில் மது அருந்திய 4,015 பேர் மீது வழக்கு: குமரி SP

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கஞ்சா வழக்குகள் குறைந்துள்ளன. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நேற்று வரை கடந்த ஓராண்டில் பொது இடத்தில் மது குடித்ததாக மொத்தம் 4,015 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும்” என்றார்.

News December 10, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,10) காலை 9 மணி கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி கீரிப்பாறை ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு 14வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.#பிற்பகல் 3 மணிக்கு குளம், ஏரிகளில் பாசி குத்தகையை உள்நாட்டு மீனவர்களுக்கு வழங்கிட வலியுறுத்தி வடசேரி மீன்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

error: Content is protected !!