India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி அனிதாகுமாரி தலைமையில் இன்று (டிச.6) சிராயன்குழியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த டாடா சுமோவை சோதனை மேற்கொண்டார். அதில் 750 லிட்டர் வெள்ளை நிற மானிய மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தை ஒட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து வாகனத்தையும் மண்ணெண்ணையையும், பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
வாடிகனில் நடைபெற்ற உலக மத பார்லிமெண்ட் மாநாட்டு நிகழ்ச்சியின்போது போப் ஆண்டவரை குமாரகோவில் NI பல்கலைக்கழக இணை வேந்தர் பைசல்கான் சந்தித்து நினைவு பரிசு வழங்கினார். நெய்யாற்றின்கரை தொழுகல் கிராமத்தில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மண்கோப்பைகளை அவர் போப்பாண்டவருக்கு வழங்கினார். கோப்பைகள் குறித்து ஆர்வமுடன் போப் ஆண்டவர் கேட்டறிந்தார். மண் கோப்பைகள் இனி போப் ஆண்டவரின் உணவு மேசையில் இடம் பெறும் என தகவல்.
2025 ஏப்ரலில் நடைபெறும் 10 ஆம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள் இன்று(டிச.,6) முதல் அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வியானவர் விண்ணப்பிக்கலாம்; கடைசி நாள் 17.12.24; தேர்வு கட்டணம் மொத்தம் ரூ.195; கூடுதல் தகவல்களை dge.tn.gov.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்ட ஆவின் மூலமாக பால் மற்றும் பலவித பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக 25,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து 23,500 லிட்டர் பால் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. மாதம்தோறும் பதாம் மிக்ஸ் பவுடர் 6 டன், பால்கோவா 1.5 டன், குல்பி ஐஸ் 7,000 விற்பனையாகிறது. 2024-25 நிதியாண்டில் இதுவரை ரூ.48 லட்சம் லாபம் ஈட்டியுள்ளதாக மாவட்ட ஆவின் அதிகாரிகள் நேற்று கூறினர்.
மலேசியாவில் நடைபெற்று வரும் காது கேளாதோருக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று(டிச.,6) ‘Triple Jump’ பிரிவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுதன் என்ற மாணவர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று(டிச.,5) குமரியை சேர்ந்த மாணவி ஹமீஷா பர்வின் தங்கப்பதக்கமும் வெள்ளிப் பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.
#காலை 10 மணிக்கு வங்கதேச இந்துக்கள் படுகொலையை கண்டித்து வேப்பமோடு சந்திப்பில் இந்து மகா சபைசார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #காலை 10:30 மணி மார்த்தாண்டம் பகுதி சாலைகளை சீரமைக்க கோரி அதிமுக சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 4:30 மணிக்கு ஏகத்துவ ஜமாத் அலுவலகத்தில் பாபர் மசூதி வரலாறு சிறப்பு கருத்தரங்கு அரங்கம் நடக்கிறது.
#காலை 9 மணிக்கு கீரிப்பாறையில் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் மருத்துவர் நியமிக்க கோரி தொடர் உண்ணாவிரதம்.#காலை 10 மணிக்கு அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு வடசேரி சந்திப்பில் இருந்து அம்பேத்கர் சிலை வரை அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் மாலை அணிவித்தல் நடைபெறுகிறது.#மாலை 4.30 மணிக்கு பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு SDPI ஆர்ப்பாட்டம்.
இந்தியாவில் 6.40 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை ரப்பர் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்திலும், தாய்லாந்து 26 லட்சத்து 15 ஆயிரம் டன் உற்பத்தியுடன் முதலிடத்திலும், இந்தோனேசியா 2வது இடத்திலும் உள்ளது. இந்தியாவில், கேரள மாநிலத்தில் 85% ரப்பரும், தமிழ்நாட்டில் 4% ரப்பரும் உற்பத்தி செய்யப்படுவதாக குலசேகரத்தில் நேற்று(டிச.,6) நடைபெற்ற ரப்பர் விவசாயிகள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
காது கேளாதோர் ஆசியா பசிபிக் தடகள போட்டிகளில் பங்கேற்று 100 மீட்டர் தடை தாவல் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற குமரி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை சமீஹா பர்வீனுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (டிச.6) காலை 9 மணி அளவில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு குமரி பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில், குமரி மாவட்டத்தை சார்ந்த பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, பஞ்சாயத்து, கிளை மற்றும் அணி/பிரிவு அனைத்து பொறுப்பாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.