Kanyakumari

News December 13, 2024

குமரியில் திருமண பதிவு மூலம் ரூ.33,56,018 வருவாய்!

image

பத்திரப்பதிவுத்துறை கீழ் இயங்கும் நாகர்கோவில் பதிவு மாவட்டத்தில் வடசேரி, இடலாக்குடி, மண்வாளக்குறிச்சி உட்பட 12 சார்பதிவகங்கள் இயங்குகின்றன. இந்த அலுவலகங்கள் மூலம் இந்து திருமணம், சிறப்பு திருமணம், தமிழ்நாடு திருமணங்கள்படி திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுகின்றன. இதன் மூலம் 2023 ஏப்ரல் முதல் 2024 நவம்பர் வரை ரூ.33,56,018 வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் நேற்று(டிச.,12) கூறினர்.

News December 13, 2024

ஆலன் பிலாவடியில் 300 ஏக்கரில் முல்லை பூங்கா – ஆய்வு

image

சுருளகோடு ஊராட்சியில் ஆலன் பிலாவடியில் 300 ஏக்கர் நிலத்தில் 2 கோடி ரூபாய் செலவில் முல்லை பூங்கா அமைக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதற்கான இடம் அளவிடும் பணி நேற்று நடைபெற்றது. இதனை சுருளகோடுஊராட்சி மன்ற தலைவர் விமலா சுரேஷ் பார்வையிட்டார். இதில் வட்டாட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News December 13, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,13) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசர் நம்பர் தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 17வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. #காலை 10 மணிகு குலசேகரம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்க வலியுறுத்தி குலசேகரம் அரசு மூடு சந்திப்பில் CPIM சார்பில் தர்ணா போராட்டம் நடக்கிறது.

News December 13, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(டிச.,13) காலை 10 மணிக்கு வீட்டு வரி உயர்வை கண்டித்து பாலப்பள்ளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு CPIM சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு மீனவர் கூட்டுறவு சங்கம், பனைவெல்ல கூட்டுறவு, சங்க நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அரசு ஆணைப்படியான ஊதியத்தை வழங்க கேட்டு நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News December 13, 2024

நாளை நடைபெறவிருந்த திறனாய்வு தேர்வு தள்ளிவைப்பு

image

தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு நாளை(டிச.,14) நடைபெற இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. நாளை காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திறனாய்வு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மழை பெய்து வருவதன் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 13, 2024

குமரி வருகை தரும் செல்வ பெருந்தகை

image

குமரி மேற்கு மாவட்ட காங்., கமிட்டி புதிய அலுவலக கட்டடம் குழித்துறையில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை மறுநாள்(டிச.,15) நடக்கிறது. விழாவிற்கு மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் மாநில காங்., கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கலந்து கொண்டு திறந்து வைக்கிறார். விஜய் வசந்த் எம்பி, எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

News December 12, 2024

குமரி மாவட்டத்தில் 14ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 14-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. விபத்தில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள், உரிமையியல் வழக்குகள், செக்மோசடி, மணவிலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சட்டப்படி ஆணை குழு செயலாளர் இன்று தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

குமரி மாவட்டத்தில் 800 நாய்களுக்கு கருத்தடை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய் கடி காரணமாக ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், மாவட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த ஆண்டு மட்டும் 800 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News December 12, 2024

குமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று(டிச.,12) அதி கனமழைக்கான ‘RED ALERT’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குமரி, சென்னை, காவிரி படுகை பகுதிகளில் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியினால், காலை முதலே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE IT

News December 12, 2024

அயோத்திக்கு புனித நீர் அனுப்பும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

image

கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகேயுள்ள தாமரையூர் அய்யாவழி பதியில் இருந்து, 108 பதிகள் தாங்கல்களின் திருநாமம் மற்றும் புனிதநீர் உத்திரபிரதேசம் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிக்கு அனுப்பும் விழாவ இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்‌.என்.ரவி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தாமரைக்குளம் பதியில் உள்ள அய்யா வைகுண்டரை தலைப்பாகை அணிந்து வணங்கினார்.

error: Content is protected !!