India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கும் மேற்பட்ட இயந்திர ஆபரேட்டர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <

குளச்சல் அருகே சாஸ்தான்கரை பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (34). இவர் பள்ளிமுக்கு சந்திப்பில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (25). இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் பிள்ளைகளுடன் வசித்து வந்த மகாலட்சுமி கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென மாயமானார்.ரூ.25,000ஐ அவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காலை 10 மணி – சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளவை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு CPI(M)சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 11 மணி – வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி CPI(ML) Red flagசார்பில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. காலை 9:15 மணி – பறக்கை மதுசூதன பெருமாள் கோவில் தேரோட்டம் நடக்கிறது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஏப்.10ம் தேதி பிற்பகல் 4:30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி, பிளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிகளில் ரூ.5 கோடியே 30 லட்சம் மதிப்பிலான பல்வேறு சுகாதார நிலைய கட்டங்களையும் அரசு மருத்துவக் கல்லூரியில் நவீன கட்டண படுக்கை வார்டையும் திறந்து வைக்கிறார்.

மும்பை CSMT – கன்னியாகுமாரி இடையே (எண்: 01005) மும்பை CSMT – கன்னியாகுமாரி வாராந்திர சிறப்பு ரயில், 2025 ஏப்ரல் 09 முதல் 30 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 00.30 மணிக்கு மும்பை CSMT-யிலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் பிற்பகல் 13.15 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும். கன்னியாகுமாரியிலிருந்து புறப்பட்டு, சனிக்கிழமைகளில் அதிகாலை 04.15 மணிக்கு மும்பை CSMT-யை அடையும்.

குமரி பகவதி அம்மன் கோவிலில் சித்திரை விசு கனி காணும் நிகழ்ச்சி ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலையில் கோமாதா தரிசனமும், அதைத்தொடர்ந்து அம்மனுக்குதங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் மலையில்உள்ள கனிகள் கொண்டு வந்து மலைபோல் குவித்து வைத்து கொன்றைப்பூ அலங்காரத்துடன் கனி காணும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்கப்படுகிறது.

நாகர்கோவிலில் உள்ள ஐஆர்டி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 250 பேருக்கு கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் ஐஆர்டி பயிற்சி மையம் மூலம் கரைக வாகன ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேருந்துகள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 3 மாத காலம் அளிக்கப்படும் இந்த பயிற்சி மூலம் ஆண்டு ஒன்றுக்கு 250 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று (ஏப்.8 ) 30. 31 அடி தண்ணீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 26.95 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-1 அணையில் 2.79 அடி தண்ணீரும், 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு-2 அணையில் 2.88 அடி தண்ணீரும் உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு 153 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 50 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிறுவனத்தில் சேவை ஆலோசகர், டெலிகாலர், ஆட்டோமேஷன் நிபுணர் உள்ளிட்ட பிரிவுகளில் 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும் நிலையில் 18 – 59 வயதிற்குட்பட்ட 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன்.4 க்குள் இங்கே <

குமரி மாவட்டத்தில் சித்திரை 10 ஆம் தேதி அன்று பழச் செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் நடவு செய்வது வழக்கம். இதனை முன்னிட்டு அனைத்து வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் தென்னங்கன்றுகள், மா மற்றும் பலா கன்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. எப்.17-ம் தேதிக்குள் பதிவு செய்து விவசாயிகள் இதனை பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.