Kanyakumari

News December 14, 2024

அணைகளின் நீர்வரத்தை கண்காணிக்க ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை பெருஞ்சாணி சிற்றாறு 1, சிற்றாறு 2, மாம்பழத்துறையாறு மற்றும் பொய்கை அணைகள் உள்ளது. தற்போது மலையோர பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அணைகளுக்கு வரும் நீரின் அளவை கண்காணித்து அதற்கு தேவையான வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News December 14, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

image

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை நாள் கூட்டம் வருகின்ற டிச.19ஆம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும். விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியரால் நேரில் பெறப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News December 14, 2024

குமரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று(டிசம்பர் 14) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக அதி கனமழை, மிக கனமழை என தொடர்ந்து பெய்து பல நீர்தேக்க பகுதிகள் வெள்ளக்காடாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பாத நிலையில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. SHARE IT.

News December 14, 2024

நல்லிணக்க விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

image

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்கான ‘கபீர் புரஸ்கார் விருது’க்கு குமரி மாவட்டத்திலிருந்து தகுதியுடையோர் நாளைக்குள்(டிச.,15) awards.tn.gov.in வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம். விருது 2025 ஜனவரி 26 குடியரசு தின விழாவின்போது வழங்கப்படும். கூடுதல் தகவல்களை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

குமரி மாவட்ட கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூகளில் நாளை (டிச.14) நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வாணையர் தெரிவித்துள்ளார். குமரி மாவட்ட கல்லூரிகளும் இந்த பல்கலை.யில் இணைவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. *உங்கள் பகுதி கல்லூரி மாணவர்களுக்கு பகிரவும்*

News December 13, 2024

குமரி மாவட்டத்தில் சிறப்பு குறைத்தீர் முகாம்

image

குமரி ஆட்சியர் அழகுமீனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும் நாளை (டிச.14) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

குமரியல் மாற்றுத்திறனாளிகள் குறைத்தீர் முகாம் அறிவிப்பு

image

குமரி மாவட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு டிச.,17 ம் தேதி பிற்பகல் 3.00 மணி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஊரகப்பகுதியில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

சில்லறை வியாபார நிறுவனங்கள் குறித்து எம்.பி அறிக்கை

image

“நாட்டில் பெருகி வரும் விரைவு வர்த்தகம் காரணமாக சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்கள் பாதிப்பு அடைவதை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்ய விரைவு வர்த்தக நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என” பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளதாக இன்று (டிச. 13)கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News December 13, 2024

செல்வ பெருந்தகை குமரி வருகை திடீர் ரத்து!

image

குழித்துறையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை வருகிற 15-ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைக்க இருந்தது. இந்நிலையில், தற்போது வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாலும், போதிய விமான சேவை இல்லாததாலும் இந்த திறப்பு விழாவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் இன்று(13ம் தேதி) தெரிவித்துள்ளார்.

News December 13, 2024

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு விருப்ப மாறுதல் கலந்தாய்வு

image

குமரி மாவட்ட பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர பயிற்றுநர்களின் விருப்ப மாறுதல் கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. 100 மாணவர்களுக்கு மேல் பயிலும் பள்ளிகளுக்கு மட்டுமே விருப்ப மாறுதல் வழங்கப்படும் என்றும், ஒரே பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பகுதிநேர பயிற்றுநர்கள் பணி மாறுதல் கோரினால் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!