Kanyakumari

News December 22, 2024

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அறிவிக்கை

image

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில்: மனித கழிவுகளை மனிதர்களே கையால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை மாநகராட்சி பகுதியில் கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் எவரும் கண்டறியப்படவில்லை என்று தெரிய வருகிறது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 15 நாட்களுக்குள் மாநகராட்சி ஆணையருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 22, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி டிச.24 & 31 ஆகிய தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் (06039/06040) விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு நண்பகல் 12.15 மணிக்கு சென்றடையும். செய்தியை பகிரவும்!

News December 22, 2024

திருவள்ளூர் சிலை விழா சிங்கப்பூர் அமைச்ச பங்கேற்பு

image

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலை வருகிற டிச.30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் முன்னிலை வகிக்கிறார். தமிழக முதலமைச்சர் தலைமை வகிக்கிறார். அன்று கண்ணாடி பாலம் திறப்பு, பூம்புகார் கைவினைப் பொருள் அங்காடித் திறப்பு, திருக்குறள் சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகின்றன.

News December 22, 2024

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்

image

தாம்பரம் – குமரிக்கு ரயில் (06039/06040) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24 & டிச.31 தேதிகளில் தாம்பரத்தில் நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு அதே நாள் மதியம் 12.15 மணிக்கு குமரிக்கு சென்று சேரும். தாம்பரம்,செங்கல்பட்டு,மேல்மருவத்தூர்,விழுப்புரம்,விருதாச்சலம்,திருச்சி,திண்டுக்கல்,மதுரை,விருதுநகர்,சாத்தூர்,கோவில்பட்டி,திருநெல்வேலி,வள்ளியூர்,நாகர்கோவில்,கன்னியாகுமரி என்கிற வழியில் பயணிக்கிறது.

News December 22, 2024

ரீல்ஸ் மோகத்தில் கோர்ட்டில் வீடியோ எடுத்த 2 பேர் மீது வழக்கு

image

நேற்று(டிச. 21) நாகர்கோவில் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவரை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது கோர்ட்டின் மேல் பகுதியில் நின்று 2 பேர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். உடனே போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது ‘ரீல்ஸ்’ மோகத்தில் கோர்ட்டில் வீடியோ எடுத்ததாககூறினர். இருவர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரிவில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News December 22, 2024

வள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீடு

image

வரும் டிச.31ம் தேதி திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழாச் சிறப்பு மலர் வெளியீடு.*தினம் ஒரு திருக்குறள் நூல் புதிய பதிப்பு வெளியீடு*திருவள்ளுவர் சிலை திறப்பு*திருக்குறள் கண்காட்சி தொடங்குதல்*திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல்*திருவள்ளுவர் சாலை பெயர் சூட்டல்*நாதசுவரம் திருக்குறள் இசை *மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்.

News December 22, 2024

வள்ளுவர் சிலை வெள்ளி விழா 2-ம் நாள் நிகழ்ச்சிகள்!

image

குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதன்படி, நிகழ்வின் இரண்டாம் நாளான டிச.31 திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலர் வெளியிடுதல்! திருவள்ளுவர் பசுமை பூங்கா திறந்து வைத்தல்! திருவள்ளுவர் சிலை தோரண வாயில் அடிக்கல் நாட்டுதல்! திருவள்ளுவர் சாலை பெயர் சூட்டுதல்! மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

News December 21, 2024

குமரி-தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம்

image

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி தாம்பரத்திலிருந்து குமரிக்கும், குமரியில் இருந்து தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதன்படி இதற்கான முன்பதிவு நாளை(டிச.22) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தாம்பரத்திலிருந்து இம்மாதம் 24 மற்றும் 31-ஆம் தேதிகளிலும், குமரியில் இருந்து 25 மற்றும் ஜனவரி 1ம் தேதியிலும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

News December 21, 2024

குமரியில் இருந்து கும்பமேளா சிறப்பு ரயில்!

image

கன்னியாகுமரி – பானராஸ் கும்பமேளா சிறப்பு ரயில் ஜனவரி மாதம் கன்னியாகுமரியில் இருந்து 6 மற்றும் 20 ஆம் தேதியும், பனராசில் இருந்து 9 & 23ஆம் தேதிகளிலும் இயக்கப்படுகிறது. நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை எழும்பூர், நெல்லூர், கம்மம், ஜபல்பூர் வழியாக இந்த ரயில் செல்லும் செல்லும். முன்பதிவு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2024

முளகுமூடு மாணவர்கள் மாநில ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தேர்வு

image

பள்ளிக் கல்வித்துறையால் நடத்தப்பட்ட சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போட்டியில் முளகுமூடு வேநாடு அகாடமி மாணவர்கள் 5 பேர் வெள்ளிபதக்கமும், 2 பேர் வெண்கலப்பதக்கமும் பெற்று மயிலாடுதுறையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கௌரவ ஆலோசகர் டொமினிக் எம்.கடாட்சதாஸ், கௌரவ தலைவர் கிறிஸ்துதாஸ் ஆசான், தலைவர் லெனின் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.

error: Content is protected !!