India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புத்தாண்டு விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா மையங்களில் கடலில் இறங்குவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. டிச.31 அன்று மாலை முதல் ஒன்றாம் தேதி வரையிலும் சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி நாகசங்கர் குமரி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை போன்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கலையரசன் குமரி மாவட்ட தலைமை இடத்து ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இவர்கள் விரைவில் கன்னியாகுமரி மாவட்ட ஏடிஎஸ்பிகளாக பதவி ஏற்க உள்ளனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயிலும் சென்னை சென்ட்ரல் நாகர்கோவில் இடையே மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – கன்னியாகுமரி ரயில் விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, விருதுநகர் வழியாகவும், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் ரயில் ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல், விருதுநகர் வழியாகவும் இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், வதிமுக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே (30.12.2024) அன்று காலை 10 அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தளவாய்சுந்தரம் அழைப்பு விடுத்துள்ளார்
நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்தவர் மோகன். ஆட்டோ டிரைவரான இவர் ஈசாந்திமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாஜி (29) என்பவரிடம் சுமார் 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை அவர் கொடுக்கவில்லை. இன்று மோகன் ஒழுகினசேரியில் உள்ள கடை ஒன்றிற்கு வந்தார். அப்போது சாஜி அங்கு வந்து அவரிடம் பணம் கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் சாஜி கத்தியால் மோகனை குத்தவே அவர் இறந்து போனார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர், தனது கோபத்தை வெளிக்காட்டும் விதத்தில் மண்ணை அள்ளி வீசினார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட குமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர் பிரதீஸ் என்பவரை கைது செய்ததை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குமரி எஸ்.பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவர்” என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி நாகசங்கர் குமரி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை போன்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கலையரசன் குமரி மாவட்ட தலைமை இடத்து ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இவர்கள் விரைவில் கன்னியாகுமரி மாவட்ட ஏடிஎஸ்பிகளாக பதவி ஏற்க உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு ஏற்கனவே 5 சொத்து கால்நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறாவது சுற்றில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் மூன்றாம் தேதி முதல் 28 நாட்கள் இந்தப் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(டிச.27) தெரிவித்தார்.
1.சென்னை பல்கலைக்கழக மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சிபூங்கா முன்பு SFIஆர்ப்பாட்டம் நடக்கிறது. 2.அதிமுக சார்பில் மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை கண்டித்து மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.3.அமித்ஷாவை கண்டித்து நாகர்கோவிலில் விசிக சார்பில் தர்ணா போராட்டம் நடக்கிறது.
Sorry, no posts matched your criteria.