India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நித்திரவிளை போலீசாருக்கு நேற்று கல்லு விளையில் உள்ள பார் ஒன்றில் மது விற்பதாக கிடைத்த தகவலின் பெயரில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 44 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக முத்துக்குமார், சிமியோன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

பிரம்மபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான கிருஷ்ணதாஸ் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ரமேஷ் மற்றும் விமல் ஆகியோர் மீது இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். மேலும் கொலை தொடர்பாக கிருஷ்ணதாஸ் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழக இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10, +2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ மற்றும் பாலிடெக்னிக் டிப்ளமோ மாணவர்கள், வேலையில்லாத இளைஞர்கள் www.nationalskillacademy.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். படிப்புகளை முடித்த பிறகு, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறலாம்.

குமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடந்த அக்.31 அன்று ஊரம்பு மீன் சந்தையில் 80 கிலோ கெட்டுப்போன செம்பள்ளி மீன்களை அழித்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.1) நடைக்காவு சந்தையில் 45 கிலோ, நித்திரவிளை சந்தையில் 15 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். கெட்டுப்போன மீன்கள் விற்பனையாவது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை அழிப்பது தொடரும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசு ₹21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலினின் வெற்றிப்பாதை பயிற்சி மையத்தின் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான மாதிரி தேர்வு 3 நாளை (நவ.2) மாவட்ட ஆயுதப் படையில் நடைபெறும். இதில் தேர்வுக்கு தகுதி உள்ள அனைத்து இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்பவர்கள் காலை 9.00 மணிக்கு நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படையில் ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

குமரி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <<-1>>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Sorry, no posts matched your criteria.