Kanyakumari

News April 25, 2025

குமரி: ரூ.19,900 ஊதியத்தில் உதவி லோகோ பைலட் பணி

image

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும். இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். குமரி மாவட்ட நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News April 25, 2025

குமரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஏப்.25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 20 தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் நிலையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.7,500 முதல் 50,000 வரை ஊதியம் வழங்கப்படும். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 25, 2025

பெண் கொலையில் பரபரப்பு தீர்ப்பு

image

திருவனந்தபுரத்தை சேர்ந்த வினிதா(38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது 4 பவுன் நகைகள் மாயமானது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரனையில் குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ராஜேந்திரன்(49) நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் நேற்று ராஜேந்திரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பிரசூர் மோகன் தீர்ப்பளித்தார்.

News April 24, 2025

குமரி: திருவள்ளுவர் சிலை பற்றிய குறிப்புகள்

image

குமரி முனையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் சில குறிப்புகள்; 133 அடி கொண்ட அந்த சிலை அமைக்கும் பணி 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000 ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிலை 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிலையின் மொத்த எடை 7000 டன். சிலையின் எடை 2500 டன். பீடத்தின் எடை 1500 டன். பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3000 டன் ஆகும். Share It.

News April 24, 2025

குமரியில் 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி – ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஏப்.24) விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசும்போது;குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 609 குளங்களில் மண் எடுக்க அனுமதி கிடைத்துள்ளது.அந்த குளங்களில் மண் எடுக்க விண்ணப்பித்த விவசாயிகளின் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.6.98% விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளது.மேலும் 724 குளங்களில் மண் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

News April 24, 2025

நீர்நிலைகளில் போலீஸ் ரோந்து – எஸ் பி உத்தரவு

image

கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நீர்நிலைப் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மேலும் நீர் நிலைகளில் குளிக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

News April 24, 2025

பிளஸ் டூ மாணவர்களுக்கான தனித்துவப் பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தனித்துவமான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு குமரி மாவட்டத்தில் ஏப்.29,30 தேதிகளில் நடக்கிறது. அரசு பள்ளி அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்திட வேண்டும் என்று அதில் அவர் கூறி உள்ளார். *ஷேர்

News April 24, 2025

ப்ளாக் பெல்ட் வாங்கிய மாணவனை பாராட்டிய எம்எல்ஏ

image

பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, மூள்ளுர்துறை கிராமத்தை சேர்ந்த செல்வன். செ. தர்ஷன் இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் கருப்பு பெல்ட் (Black belt), ஒரு நிமிடத்தில் 10 விரல்கள் மூலம் 57 புஸ்அப்ஸ் (Push Ups) செய்து உலக சாதனையும் படைத்துள்ளார். அவரை ராஜேஷ்குமார் எம்எல்ஏ பாராட்டினார்.

News April 23, 2025

ஒரே நாளில் 116 பேர் அதிரடி இடமாற்றம் எஸ் பி நடவடிக்கை

image

தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் ஆகிய பகுதிகளை தலைமையிடமாககொண்டு நெடுஞ்சாலை ரோந்து படை செயல்படுகிறது. காவல் நிலையம் நெடுஞ்சாலை ரோந்து ஆயுதப்படை என 69 போலீசார் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீசார் 47 பேர் என நேற்று ஒரே நாளில் 116 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.

News April 23, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நாகர்கோவில் பயோனியார் குமாரசாமி கல்லூரியில் நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை அளிக்க இருக்கிறார்கள். *உங்களது மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்*

error: Content is protected !!