Kanchipuram

News December 6, 2024

வாலாஜாபாத் அருகே கார் டயர் வெடித்து விபத்து 

image

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் வேடல் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.  அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த நான்கு இளைஞர்கள் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், சிறிது நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

News December 6, 2024

நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி தொடங்கியது

image

காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கியது. இந்தப் பேரணியை ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார். நுகர்வோரின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு கொள்ளும் வகையில், மாணவிகள் பேரணியில் கோஷமிட்டனர். இதில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 6, 2024

தக்காளி வரத்து அதிகரிப்பு: 1 கிலோ ரூ.40க்கு விற்பனை

image

ஆந்திர மாநிலம் பலமநேரி, புங்கனூர், மதனபள்ளி, கர்நாடக மாநிலத்தில் தாவணிகரை மற்றும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி பயிரிடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் விளையும் தக்காளி, காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மழையின்போது, காஞ்சிபுரத்தில் 1 கிலோ தக்காளி ரூ.80க்கு விற்கப்பட்டது. தற்போது வரத்து அதிகரித்ததால் 1 கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.

News December 6, 2024

வரி செலுத்தாத 7 கடைகளுக்கு சீல்!

image

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளது. வாடகைதாரர்கள் செலுத்த வேண்டிய பணம் பல கோடி ரூபாய் நிலுவையில் இருந்து வருகிறது. மாநகராட்சி ஆணையர் ரவீந்திரன் உத்தரவின்படி, அதிகாரிகள் ரூ.1.30 கோடி வாடகை பாக்கி வைத்திருந்த உணவகம் உள்ளிட்ட 7 கடைகளுக்கு அதிரடியாக சீல் வைத்தனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

News December 5, 2024

செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த பட்டதாரி வாலிபர் கைது

image

கடந்த மாதம் மாங்காட்டில் மோட்டார் சைக்கிளில் கணவன் மனைவி சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் தாலி செயினை பறித்து கொண்டு சென்றார். இது குறித்து மாங்காடு போலீசார் தீவிரமாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது பட்டாபிராம் கரிமேடு பகுதியை சேர்ந்த குணசேகரன்(33) என்பது தெரிய வந்தது. சுமார் 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குணசேகரனை போலீசார் கைது செய்துள்ளனர். 

News December 5, 2024

முதல்வர் மருந்தகம்; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு 

image

முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள BPharm, DPharm பட்டம்  பெற்றவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில்முனைவோர் இன்று (05.12.2024) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்த நிலையில் 10.12.2024 வரை நீட்டிப்பு செய்து காஞ்சிபுரம் மாவட்ட இணை பதிவாளர் ஜெயஸ்ரீ அறிவித்துள்ளார். 

News December 5, 2024

சாம்சங் விவகாரம்- பதிவுத்துறைக்கு ஆணை

image

சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரும் மனு மீது 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிஐடியு தொடர்ந்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நிறுவனத்தின் பெயரில் தொழிற்சங்கம் தொடங்குவது அடிப்படை உரிமை இல்லை என சாம்சங் நிறுவனம் வாதிட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2024

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 102 பேர் கைது

image

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே, வங்கதேசத்தில் இந்து கோயில்கள் மற்றும் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, பாஜக இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இணைந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் நம்பிநாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.தலைவர் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், 102 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

News December 5, 2024

முதல்வர் மருந்தகம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

B.Pharm, D.Pharm சான்று பெற்றவர்கள், தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (டிச.5) கடைசி நாள் என்பதால், விருப்பமுள்ள தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மானியமாக ரூ.3 லட்சம் 2 தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

News December 4, 2024

சாலையில் செல்லும் வாகனங்களை இளம்பெண் மறித்ததால் பரபரப்பு

image

காஞ்சிபுரத்திலிருந்து செவிலிமேடு வழியாக செல்லும் வந்தவாசி சாலையில் இளம் பெண் ஒருவர் திடீரென்று சாலையில் செல்லும் வாகனங்களை மறித்து நின்று உள்ளார். அப்போது தகவல் அறிந்து வந்த பெண் காவலர்கள் அப்பெண்ணை அழைத்து செல்ல முற்பட்டபோது, இளம்பெண் அப்பகுதியில் இருந்து வருவதற்கு மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!