India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தாலுகாக்களுக்கு செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில்<
காஞ்சிபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பில் பள்ளி மாணவர்-மாணவிகள், பொது பிரிவினர், பெண்களுக்கான தனிப்பிரிவு சதுரங்க போட்டி வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்-மாணவிகள் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் விளையாட அனுப்பப்பட உள்ளனர். மேலும், விபரங்களுக்கு 99942 93081, 95002 34581 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சி சதுரங்க செயலர் ஜோதிபிரகாசம் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 13,81,710 ஆகும். இதில், ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,70,932, பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 7,10,561, இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 217 ஆகும். இன்று முதல் தொடர் திருத்தம் நடைபெறுவதால் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான திருத்தங்களை மனு மூலமாகவும், இணையதளம் (Voters.ecl.gov.in) வாயிலாகவும் பதிவு செய்து பயன் பெறலாம். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (06.01.2025) மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கழகம் இணைந்து நடத்திய, பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தில், AUDIO BOOK FOR VISUALLY IMPAIRED கருவியை வடிவமைத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ/மாணவியரை வாழ்த்தி ரூ.10,000/-க்கான காசோலையை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2025க்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட, சார்- ஆட்சியர் ஆஷிக் அலி, பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இருந்தனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் 185ஆவது நாள் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் சென்னை பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள பாபா சாகேப் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில், திருமதி.ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார். காஞ்சிபுரம் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கே. பிரபாகரன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் காஞ்சிபுரம் நிர்வாகிகள் இருந்தனர்.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், மத்திய அரசு சார்பில், ரூ.70 கோடி மதிப்பில், பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பாலான பணிகள் முடிக்காமல் இழுபறியாக உள்ளன. இதில், 41 நிலுவை பணிகளுக்கு தற்போது ‘டெண்டர்’ விடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில், வளர்ச்சி பணிகளை முடிக்க மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முதல்வரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பு தொகையில் 35 % அல்லது ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். இவை மானியத்துடன் கூடிய வங்கி கடனுடன் வழங்கப்படும். புதிரை வண்ணார் சமூகத்தினர் இந்த திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். இம்ந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் தட்டுப்பாடு உள்ளது. சுகாதாரத்துறை அனுமதித்த 450 பணியிடங்களில் 160 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலியாக உள்ள பணியிடங்களில், 12 மருத்துவர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சிலர் பிரச்னை செய்வதாக கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறினார். வெளிநபர்கள் அலுவலகத்தில் ஆட்கள் இல்லாத நேரத்தில் இதுபோல் உள்ளே நுழைந்து பிரச்னை செய்கின்றனர். கோயில் பணியாளர்கள் சீருடையில் இருப்பார்கள். அவர்களுக்கு சீருடை வழங்கி இருக்கிறோம். இதுபோல் வெளிநபர்கள் உள்ளே வந்து கோயில் நிர்வாகங்களில் தலையிடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Sorry, no posts matched your criteria.