Kanchipuram

News January 9, 2025

உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகைபுரிந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

13 ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன. 17ஆவது சுற்றுக்கு இளையனார், வேலுார், கம்மராஜபுரம், களியனுார், ஏனாத்துார், கரூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கொழுமுடிவாக்கம், மலையம்பாக்கம், அம்மையப்பநல்லுார், காரணை, ஒழுகரை, கம்மாளம்பூண்டி ஆகிய கிராமங்களில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் இன்று (ஜன.9) நடைபெற உள்ளது.

News January 9, 2025

ரூ.9 ஆயிரம் சம்பளம் உயர்வு: சாம்சங் நிர்வாகம் அறிவிப்பு

image

சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், பணியாளர்கள் ஒரு பகுதியினர் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்.9ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை செயலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், இரு தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் சுமூக முடிவு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மேலும், ரூ.9,000 சம்பள உயர்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

காஞ்சிபுரத்தில் இன்று இனிதாக…

image

ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காலை 9 மணிக்கு பொங்கல் சிறப்பு ஸ்ருஷ்டி பஜார், கச்சபேஸ்வரர் கோவிலில் காலை 6:30 மணி மற்றும் மாலை 5 மணிக்கு திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு, காஞ்சிபுரம் ராஜ வீதியில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் மதியம் 12 மணிக்கும், ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபம் அருகில் காலை 8:30 மணி, பகல் 12:30 மணி, இரவு 7 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

News January 9, 2025

காஞ்சிபுரத்தில் இன்று இனிதாக…

image

பிள்ளையார்பாளையம் முடங்கு வீதியில் உள்ள காயோரோகணீஸ்வரர் கோவிலில் காலை 8 மணிக்கும், புதுப்பாளையம் தெருவில் உள்ள ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கும், உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில் காலை 7:30 மணிக்கும், திம்மராஜாம்பேட்டை பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் காலை 7 மணிக்கும், கன்னிகாபுரம் வேலாத்தம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

News January 9, 2025

காஞ்சிபுரத்தில் இன்று இனிதாக…

image

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று (ஜன.9) மாலை 6:30 மணிக்கும், டி.கே.நம்பி தெருவில் உள்ள திருமங்கையாழ்வார் மண்டபத்தில் மாலை 6:30 மணிக்கும், மேற்கு ராஜ வீதியில் உள்ள கோதண்டராமர் பஜனை கோவிலில் இரவு 7 மணிக்கும், ஒ.பி., குளம் தெருவில் உள்ள ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடத்தில் இரவு 7 மணிக்கும், குருவிமலை கிராமத்தில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில் இரவு 7 மணிக்கும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News January 8, 2025

காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு 

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 4 ஒப்பந்த பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்களை  https://kancheepuram.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை, ஜன.17 அன்றுடன் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News January 8, 2025

திமுக ஆர்ப்பாட்டத்தில் 1,000 பேர் பங்கேற்பு 

image

தமிழக சட்டசபை கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக கவர்னர் ரவியை கண்டித்து, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே தெற்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று (ஜன.7) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், எம்.பி. செல்வம், மாநகர செயலர் தமிழ்ச்செல்வன், மேயர் மகாலட்சுமி உள்ளிட்ட 1,000 பேர் பங்கேற்றனர். இக்கூட்டம் காரணமாக, காமராஜர் சாலையில் சுமை ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News January 8, 2025

100க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் கைது

image

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜன.7) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் சாா்பில் காவலான் கேட் பகுதியில் மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.போலீசார், உடனடியாக அவர்களை கைது செய்தனா்.

News January 7, 2025

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற மாணவிகள்

image

‘சி கேப்’ அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கங்கள் இணைந்து நடத்திய கைப்பந்து போட்டியில், முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் சிறப்பு நிலை மாணவிகள் முதல் பரிசு வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் கோ.சாந்தி பங்கேற்றார்.

error: Content is protected !!