India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெமிலி அசநெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த சஞ்ஜய் (25), அரக்கோணம் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (28) இருவரும், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்தனர். கடந்த 9ஆம் தேதி இரவு காஞ்சிபுரம் – திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் ஆட்டுப்பாக்கம் ரயில்வே கேட் அருகே இவர்கள் சென்ற பைக் மீது, காஞ்சிபுரம் நோக்கி சென்ற வேன் மோதியது. இதில் இருவரும் உயிரிழந்தனர். நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 27ஆவது வார்டு பெண்களுக்கான பட்டியலின வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 2022இல் தேர்தலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஷாலினி, தான் பட்டியலின் பெண் என போலியாக ஆவணம் தயாரித்தது தெரிந்தது. இவ்வழக்கில் நீதிமன்றம் உத்தரவை மேற்கோள்காட்டி, ஷாலினி பதவி இழந்த அறிவிப்பை காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன், தன் அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டினார்.
வாலாஜாபாத், களியனூரைச் சேர்ந்தவர் பூமிகா (24). இவர் திண்டிவனத்தைச் சேர்ந்த வாலிபரோடு நெருக்கமாக பழகி வந்ததால் கர்ப்பமானார். நேற்று முன்தினம் (ஜன.9) பூமிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று (ஜன.10) வள்ளுவப்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில், குழந்தையை பூமிகா வீசி கொலை செய்தார். சிவகாஞ்சி போலீசார் பூமிகாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதும். விருப்பம் உள்ள பதிவுதாரர்கள் www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் துவங்குதல் போன்றவற்றுக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், வணிக கட்டடங்களுக்கு குடியிருப்பு வகைப்பாட்டில் சொத்து வரி செலுத்தி வந்த 1,667 பேருக்கு, 1.23 கோடி ரூபாய் வரி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து, வரி விதிக்கும் நடவடிக்கை வாயிலாக 5.34 கோடி ரூபாய் கூடுதலாக கிடைக்கும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், நேற்று (ஜன.9) கர்நாடக மாநில துணை முதல்வா் சிவக்குமாா் சக்கரத்தாழ்வாா் சந்நிதியில் மகா சுதர்சன யாகம் செய்து வழிபட்டாா். ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், பிரத்தியங்கரா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், காஞ்சிபுரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து, வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில், 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை, பூக்கடைச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22), தனுஷ் (22) கடந்த டிச.25ஆம் தேதி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். புகாரின் பேரில் போக்சோவில் நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், 15 வயது சிறுமியை அழைத்து சென்று வேலுாரைச் சேர்ந்த ராஜேஷ் (22) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு தேர்விற்கு விண்ணப்பிக்க, திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் ஆகியோர் 01.01.2005 முதல் 01.07.2008 வரையான காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான கல்வி தகுதி 12ஆம் வகுப்பு அல்லது 3 ஆண்டு பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தவர்களாக இருத்தல் வேண்டும். இத்தேர்வு குறித்த விவரங்களுக்கு https//agnipathvayu.cdac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சரான டி.கே. சிவகுமார் காஞ்சிபுரத்தில் ஒருநாள் பயணமாக சுற்றுப்பயணம் வருகை தந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Sorry, no posts matched your criteria.