India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் 3ஆகிய 12ஆம் வகுப்பு மாணவர்கள் முகம் சிதைக்கப்பட்டு ஏரியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், பரத்திற்கும் சிறுமையூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மோதலில் மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். உடற்கூறாய்வுக்கு பிறகு தெரியவரும்.
உத்திரமேரூர் அருகே உள்ள ஏரியில் 12ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களின் சடலம் முகம் எரிக்கப்பட்ட நிலையில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ஏரியில் மிதந்த 3 சடலங்கள் மீட்கப்பட்டன. அவர்கள், பழையசீவரத்தை சேர்ந்த விஷ்வா, சத்ரியன், பரத் ஆகியோர் என்பது தெரியவந்தது. முன்பகை காரணமாக மூவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பார்வேட்டை உற்சவத்தின்போது, வடகலை – தென்கலை பிரிவினர் இடையே கடுமையான மோதல் நடந்துள்ளது. பார்வேட்டை உற்சவத்துக்கு வந்த வரதராஜ பெருமாளுக்கு மண்டகப்படி நடக்கும்போது, இரு பிரிவினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, வீதி உலா நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் வழிகாட்டுதலில், பொன்னேரிக்கரை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு தூணருகே, நேற்று (ஜன.14) ஒன்றிய செயலர் பி.எம் குமார் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொங்கல் வைத்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிப்பூர் குண்டு குளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார்- செல்வி தம்பதியினர், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழாவினை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு 3 டன் எடை கொண்ட செங்கரும்பினால் மாட்டு வண்டி, 5 அடி உயரமுள்ள 2 காளை மாடுகளை உருவாக்கி அசத்தியுள்ளார். ஏராளமானோர் அப்பகுதிக்கு வந்து ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து சென்றனர்.
திருவள்ளூர் தினத்தை முன்னிட்டு, இன்று (ஜன.15) புதன்கிழமை சென்னையில் உள்ள மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) ஆகியவைகளின் கீழ் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களும் இயங்காது. மீறி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது பிரியர்களுக்கு ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2025/01/2025010871.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பரந்தூர் கிராம மக்களை நேரில் சந்தித்து பேச பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. சண்முகம் மற்றும் தமிழக டி.ஜி.பி. ஆகியோருக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏற்கனவே கடிதம் வழங்கியிருந்தனர். பரந்தூர் மக்களை கட்சி தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க உள்ளார். இந்த நிலையில், இந்த சந்திப்புக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி பூஜைக்கு தேவையான பூக்களின் தேவை அதிகரித்ததால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில், நேற்று (ஜன.13) பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக, 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000க்கு விற்கப்பட்டது. விலை உயர்ந்தாலும், பூ வாங்க வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பூக்கடை சத்திரம் களைகட்டியது. பொதுமக்கள் பூஜை மற்றும் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
வல்லம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் (76). பூசாரியான இவர், நேற்று (ஜன.13) காலை ஸ்ரீபெரும்புதுார் – சிங்கபெருமாள் கோவில் சாலையை கடக்க முயன்றபோது தொழிற்சாலை வேன் மோதி உயிரிழந்தார். இதையறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர், இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாவும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரி இறந்தவரின் உடலை எடுக்கவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.