Kanchipuram

News March 11, 2025

முதியவரை தள்ளி விட்டு பேருந்து நடத்துனர் அட்டூழியம்

image

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில், சென்னையில் இருந்து, காஞ்சிபுரம் வழியாக, நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டுச் சென்ற விரைவு பேருந்து ஒன்று, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, திண்டிவனம் செல்லும் முதியவர் ஒருவர், இப்பேருந்தில் ஏற முயன்றபோது, பேருந்து அங்கு நிற்காது எனக் கூறி இடித்து தள்ளி உள்ளார்.இச்சம்பவத்தால் அங்குள்ளவர்கள் நடத்துநரை தட்டிக் கேட்டனர்.

News March 10, 2025

கல்வியில் முன்னேற வைக்கும் திரிசூலநாதர் திருக்கோயில்

image

காஞ்சிபுரம், திரிசூலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில். இங்கு இறகு இல்லாத சபவேஸ்வரர் அருள்பாலிக்கிறார். கார்த்திகை தீபம், சிவராத்திரி, பங்குனி உத்தரத்தன்று திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பு. இங்கு வழிபட்டால் கல்வி மற்றும் வேலையில் அடுத்த கட்டத்திற்கு போகலாம் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் சுவாமிக்கு வஸ்தினம் அணிவித்து அபிஷேகங்கள் செய்கிறார்கள். சேர் பண்ணுங்க.

News March 10, 2025

மாடி படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

image

மணிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகுமாரன், வித்தியா தம்பதி. இவர்களது இரண்டரை வயது குழந்தை ஆருத்ரா. நேற்று மாலை வித்தியா துணிகளை காய வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்று துணியை காய வைத்துள்ளார். அப்போது குழந்தை ஆருத்ரா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

News March 10, 2025

கண்புரை அறுவை சிகிச்சை முகாம்: 227 பேர் பங்கேற்பு

image

காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (மார்.9) நடந்தது. முகாமில், 227 பேர் பங்கேற்றனர். இதில், நோயின் தன்மைக்கேற்ப மருந்து வழங்கப்பட்டது. கண்புரை குறைபாடு உள்ள 75 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 45 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

News March 10, 2025

பரோடா வங்கியில் வேலை: நாளையே கடைசி

image

பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News March 10, 2025

சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகே திருட்டு

image

செரப்பனஞ்சேரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த 5ஆம் தேதி ரூ.5,000 பணத்துடன் காரில் சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். பணத்தை காரில் வைத்துவிட்டு, சார் பதிவாளர் அலுவலகம் சென்றுவிட்டு திரும்ப வந்துபார்த்தபோது பணம் காணாமல்போனது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் வருவதுபோல் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News March 10, 2025

காமாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

image

காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி 7ஆம் திருநாள் நிகழ்ச்சியாக நேற்று (மார்.9) நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்மன் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.

News March 9, 2025

சகல தோஷங்களை நீக்கும் ஸ்ரீ அகத்தீஸ்வரர்

image

காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இது சகல தோஷங்களும் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது. இது சூரியனின் அம்சத்துடன் திகழும் ஆலயமாக உள்ளது. மேலும் வேலை வாய்ப்பு கிடைக்க பக்தர்கள் இங்கு தரிசனம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் சிகப்புவஸ்திரம், எருக்க இலை, கோதுமை தானியம் கொண்டு வழிபட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை தருகிறார். ஷேர் பண்ணுங்க.

News March 9, 2025

அரசு மருத்துவமனையில் வேலை; நாளையே கடைசி நாள்

image

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து நாளைக்குள் (மார்ச்.10) விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News March 9, 2025

லாரி மோதி மூதாட்டி பலி: போலீசார் விசாரணை

image

குன்றத்துார் அடுத்த கலெடிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூசம்மாள் (75). இவர், நேற்று (மார்.8) ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் பூசம்மாள் தூக்கி வீசப்பட்டு பலியானார். அப்போது அதே வழியில் சென்ற மற்றொரு லாரி, விபத்து ஏற்படுத்திய லாரியின் பின்னால் மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் சேதமாகி ஓட்டுநர் இளவரசு (38) காயமடைந்தார்.

error: Content is protected !!