India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 22655 விவசாயிகள் பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறுகின்றனர். அதில் 10062 பேர் மட்டுமே நாளைய தேதி வரை அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர். இனிமேல், தனி அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை ஊக்கத்தொகை ஏப்ரலில் விடுவிக்கப்படும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர்யவல்லி சமேதே ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில். இந்த கோவிலில் செவ்வாய், சனிக் கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி பயபக்தியுடன் சுவாமியை வழிபட்டால் திருமண வரம் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் இத் திருக்கோவிலுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பூமி, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க.
திருக்கழுக்குன்றம் அடுத்த பள்ளமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி (46). இவரது கணவர் துளசி ஜெயராம். இருவரும் பொறியியல் கல்லூரி உதவியாளர்கள். இருவரும் நேற்று (மார்.11) மாலை பைக்கில் உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக காட்டுக்கூட்டு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆதிலட்சுமி சாலையில் தவறி விழுந்த போது, பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசு Mobile App Developer பணிக்கு இலவச படிப்பை வழங்குகிறது. இந்த படிப்பு மூலம் செயலிகளை உருவாக்குவும், செயல்படுத்தவும் முடியும். 12ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும். 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் ரூ.35,000 – ரூ.45,000 வரை சம்பளத்தில் வேலை கிடைக்கும். GRIT Talents, Gradianty, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய நிறுவனங்களில் <
வாலாஜாபாத்தில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று (மார்.11) வண்டலுார் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் உள்ள ஒரகடம் மேம்பாலத்தை கடந்தபோது அதிக பாரம் ஏற்றி வந்ததால் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இருந்த இரும்பு கம்பிகள் சாலை நடுவே விழுந்தது. அஷிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
காஞ்சிபுரத்தில் உள்ள 10 முக்கிய கோவில்களை தற்போது பார்க்கலாம். 1. ஏகாம்பரநாதர் கோயில், 2. காஞ்சி கைலாசநாதர் கோயில், 3. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், 4. வரதராஜ பெருமாள் கோயில், 5. ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், 6. ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில், 7. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், 8. ஐராவதனேஸ்வரர் கோயில், 9. சித்திரகுப்தர் கோயில், 10. த்ரிலோக்யநாதர் கோயில். ஷேர் பண்ணுங்க.
காஞ்சிபுரம்: திருக்காழிமேடு பகுதியில் பிரபல ரவுடி வசூல் ராஜ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் கொலை செய்தது யார் என துப்பு துலக்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த காட்சியில் தென்பட்ட ஒருவர் கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவர் என்றும், மற்றோருவர் 22 வயது இளைஞர் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில் பிரபல ரவுடியான வசூல்ராஜா மீது வெடிகுண்டு வீசி வெட்டிக்கொன்று விட்டு 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயலில் ஈடுப்பட்டுள்ளது. வசூல்ராஜா மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பழிக்குப்ழியாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் ராமநாதசுவாமி திருக்கோயிலில் பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நாளை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 76 காலிப்பணியிடங்கள் உள்ளன. 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்து மதத்தை சார்ந்தவரக இருக்க வேண்டும். ரூ.10,000 முதல் ரூ.50,400 வரை மாத சம்பளம். இந்த லிங்கை<
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், திருப்பணிகள் நடந்து வருகின்றது. கோவிலின் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில்,கோவிலின் நான்காம் பிரகாரத்தில், சீரமைப்பு பணிக்காக, கோவில் ஊழியர்கள் பள்ளம் தோண்டி உள்ளனர். அப்போது, மண்ணுக்கு அடியில் சிலை ஒன்று தென்பட்டுள்ளது. மேலும், ஆழப்படுத்தி பார்க்கும்போது, அது முருகன் சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து அச்சிலையை கோயிலில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.