India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் பகுதியில் இயங்கும் தமிழகம் இலவச கல்வி பயிற்சி நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த கிளம்பி பகுதியில் ஊராட்சி திடலில் இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர்களுக்கு கலை நிகழ்ச்சி விழா நடைபெற்று. பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்களை நாளை மறுதினம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்திக்க இருப்பதால் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு சந்திப்பில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ’76 சி’ அரசு பேருந்து, பென்னலூர் கூட்டு சாலையில் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் காயமடைந்து, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, விஜய் போராட்டக் குழுவினரை சந்திக்க உள்ளார். விஜய் பரந்தூர் செல்வதற்கு 20ஆம் தேதி காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதன்முறையாக போராட்ட களத்திற்கு செல்கிறார். மக்களை சந்திக்க ஏகனாபுரம் பகுதியில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை பொதுச்செயலாளர் ஆனந்த் நேற்று (ஜன.17) பார்வையிட்டார்.
காஞ்சிபுரத்தில் இன்று (ஜன.18) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், சேக்குப்பேட்டை, டோல்கேட், காந்திரோடு, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம், ஆட்சியர் அலுவலகம், கீரை மண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, செவிலிமேடு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
குன்றத்தூர் வட்டம், சிக்கராயபுரம் கிராமம், தங்கம் அவென்யூ, 10ஆவது தெருவில் உடல் உறுப்பு தானம் செய்த குணசுந்தரி, என்பவரின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில், குன்றத்தூர் வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரத்தில் தன்னைப் பார்ப்பதற்காக காத்திருந்த பொதுமக்களை, காரில் இருந்து இறங்கி சென்று சந்தித்து காணும் பொங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின், பொதுமக்களின் அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். மேலும், அங்கிருந்த குழந்தைகளுக்கு வாழ்த்து கூறி முதலமைச்சர் ஸ்டாலின் இனிப்புகளையும் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூருக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, செல்லும் வழியில் தன்னை பார்ப்பதற்காக காத்திருந்த பொதுமக்களை காரில் இருந்து இறங்கி சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின், பொதுமக்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். பின்பு, அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
+1, +2 மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டி வரும் 22ஆம் தேதி காஞ்சிபுரம் கா.மு.சு. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நடக்கிறது. போட்டி நாளன்று மாணவர்கள் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். முதல் பரிசு ரூ.10,000, 2ஆம் பரிசு ரூ.7,000, 3ஆம் பரிசு ரூ.5,000 உடன் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் எல்லைக்குட்பட்ட வழுதவாடி ஏரியில், நேற்று (ஜன.15) 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூவர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களின் உடல்கள் செங்கல்பட்டு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பள்ளி மாணவர்களை கொலை செய்த வழக்கில் 4 இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.