India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண்ணூரில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் பரந்தூரில் 1,005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது விமான நிலைய செயல்பாடுகளுக்கு தடைகள் பரந்தூரில் குறைவாக உள்ளன எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் பரந்தூர் விமான நிலைய திட்டம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மொத்தம் 283 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியர் கலைச்செல்வி தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் பாக்கியலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனுக்களை பெற்று உடனடியாக தீர்வு காணத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காஞ்சிபுரத்தில் வரும் ஜன.24ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன. தனியாா் நிறுவனங்கள் பல கலந்து கொண்டு, 1,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான ஆட்களை தோ்வு செய்யவுள்ளன. 10, 12ஆம் வகுப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் பலரை தோ்வு செய்ய உள்ளனர். 18 – 35 வயது உடையவா்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, 044-27237124 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதத்திற்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மூன்றாம் கட்டமாக 4 நாட்கள் முகாம்கள் நடத்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி, உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்களும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் 10 முகாம்கள் என மொத்தம் 20 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, பின்வரும் கிராமங்களில் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாமரை உ.ஜெகதீசன் தமிழக பாஜக மாநில செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்டை பொறுப்பாளருமான வினோத் ப.செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வில் பாஜக மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட நிர்வாகி அதிசயம் பாக்குமார், மாநகர மேற்கு உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் தியாகு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நேற்று (20.01.2025) நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை அருண், துணைத் தலைவர் அப்துல் குத்தூஸ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வரும் 29ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கு என்று தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர்.
நாளை(21.01.2025) காலை 10 மணிக்கு பெருநகர் பி.எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் நடைபெறும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை, அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
பரந்தூரில் விஜய் பேசியது தொடர்பான கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “முழு தமிழ்நாடும் புதிய விமான நிலையம் வேண்டும் என்பதை விரும்புகிறது. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், விஜய் முன்மொழியும் மாற்று இடம் எது? என்பதையும் அவரே கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.