Kanchipuram

News January 25, 2025

ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டம்

image

ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை, 3 நகல்களில் காஞ்சிரம் மாவட்ட ஆட்சியருக்கு 07.02.2025ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அறிக்கையினை சம்மந்தப்பட்ட துறையிடமிருந்து பெற்று 20.02.2025 அன்று நடைபெறும் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும்.

News January 25, 2025

காஞ்சிபுரத்தில் 3 ஆண்டுகளில்  12,438 தொழில் நிறுவனங்கள் 

image

காஞ்சிபுரத்தில் உணவு, மரம், கட்டுமானம் உள்ளிட்ட 35 வகைப்பாடுகளின் கீழ், 3 ஆண்டுகளில் மட்டும் 12,438 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகரித்து இருப்பது, புள்ளியியல் துறை வெளியிட்ட ஆண்டறிக்கை வாயிலாக தெரியவந்துள்ளது. கடந்த 2021 – 22ல், 10,771 தொழில் நிறுவனங்களும், 2022 – 23ல், 19,892 நிறுவனங்களும், 2023 – 24ல், 23,209 நிறுவனங்கள் பதிவு செய்து இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2025

வரும் 27ஆம் தேதி இ.பி.எஃப் குறைதீர் முகாம்

image

அம்பத்தூரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.) சாா்பில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சத்யம் கிராண்ட் ரிசார்ட்யில் குறைதீா் முகாம் வரும் திங்கள்கிழமை (ஜன. 27) நடைபெற உள்ளது. இந்த முகாமில், முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

News January 25, 2025

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நாளை (ஜன.26) காலை 11 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதிசெலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படவும் உள்ளன.

News January 24, 2025

காஞ்சிபுரத்தில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று (ஜன.24) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள் பல கலந்து கொண்டு 1000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு 18-35 வயதுடையவர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு இன்றி இருக்கும் நபர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 24, 2025

தொழிற் பழகுநர் ஆள் சேர்ப்பு முகாம் – காஞ்சிபுரம் (2024-25)

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அறிவிப்பின் படி, தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம் 31.01.2025 அன்று ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும். மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 1,500 இடங்கள் நிரப்பப்படுகின்றன. விவரங்களுக்கு dadskillkpm@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

News January 24, 2025

2023 – 24ம் ஆண்டில்சொத்துக்களின் மதிப்புகள் குறைவு

image

காஞ்சிபுரத்தில், இணை சார் – பதிவாளர் அலுவலகம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று ஆகிய மூன்று பதிவாளர்கள் அலுவலகங்கள் என மொத்தம் ஐந்து சார் – பதிவாளர் அலுவலகங்கள் மட்டுமே பதிவுத்துறை மாவட்ட எல்லைக்குள் செயல்படுகின்றன. 2022 – 23ம் ஆண்டை காட்டிலும், 2023 – 24ஆம் ஆண்டில் பதிவுகளின் எண்ணிக்கையும், அதன் வாயிலாக பரிவர்த்தனையான சொத்துக்களின் மதிப்புகளும் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

News January 24, 2025

பாமகவை சேர்ந்தவர் எரித்து கொலை; உறவினர்கள் போராட்டம்

image

காஞ்சிபுரம் அருகே பாமகவை சேர்ந்த தமிழரசன் என்பவர் எரித்து கொலை செய்யப்பட்டதால் உறவினர்கள் பேரணியாக சென்று போலீசாரின் தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். நீதி கிடைக்கும் வரை தமிழரசன் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போலீசாரின் தடுப்புகளை உடைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

ஜனவரி 25ஆம் தேதி அமைச்சர் வருகை

image

திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் எதிரே காமராஜர் சாலையில் வரும் ஜனவரி 25ஆம் தேதி மாலை நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார், இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 23, 2025

அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுரவு மையக் கூட்ட அரங்கில் இன்று (ஜன.23) மாவட்ட கண்காணிப்பாளர் கா.சு.கந்தசாமி தலைமையில், அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கா.ஆர்த்தி, சார் ஆட்சியர் ஆஷிக் அலி, ஆட்சியர் பயிற்சி மிருணாளினி ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!