Kanchipuram

News January 30, 2025

அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன்

image

படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பொன்னம்பலம் மணிமங்கலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவர்மீது, பெண் வன்கொடுமை, ஆபாசமாக பேசுதல் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோ, பொன்னம்பலத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

News January 30, 2025

அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

image

படப்பையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குன்றத்தூர் மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் பொன்னம்பலம் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

News January 30, 2025

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அதிமுக நிர்வாகி கைது

image

படப்பை பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (60) குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர். இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த இரு பெண்கள் வாடகைக்கு தங்கி ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். இதில் ஒரு பெண்ணுக்கு பொன்னம்பலம் காதலிப்பதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து மணிமங்கலம் போலீசார் பொன்னம்பலத்தை இன்று கைது செய்தனர்.

News January 30, 2025

மெட்ரோவில் பெண் பொறியாளர்களுக்கு வேலை

image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் பொறியாளர்கள் (சிவில்) உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 2 வருடங்கள் அனுபவம் கொண்ட 30 வயதுக்கு உட்பட்டவர்கள் வரும் பிப்.10ஆம் தேதிக்குள் chennaimetrorail.org என்ற இணையதளத்தில் <>விண்ணப்பிக்கலாம்<<>>. மாதம் ரூ.62,000 சம்பளம். இந்த முயற்சி, பொறியியல் பணியாளர்களிடையே பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும். ஷேர் பண்ணுங்க

News January 30, 2025

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து 31.01.2025 காலை 7 மணிக்கு சர்வத் தீர்த்த குளம், குன்றத்தூர் பொன்னியம்மன் கோவில் குளம், மாங்காடு பட்டூர் தந்தி கால்வாயில் நெகிழி கழிவு சேகரிப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. மக்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அழைப்பு விடுத்துள்ளார்.

News January 30, 2025

புதிய பஸ் நிலையத்திற்கான மண் பரிசோதனை நிறைவு

image

பொன்னேரிக்கரையில் கட்டி வரும் உயர்மட்ட பாலம் அருகே உள்ள 19 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைத்து கொள்ள காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அந்த இடத்தை பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டுமான பணிகள் துவக்குவதற்கு முன், மண் பரிசோதனையும் முடிந்துவிட்டது. விரைவில் டெண்டர் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 29, 2025

தவெக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக தென்னரசு நியமனம்

image

தமிழக வெற்றி கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்ட 3 சட்டமன்ற தொகுதிகளின் உட்பட்டு மாவட்ட செயலாளராக எஸ்.பி.கே.தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். மாவட்ட இணைச் செயலாலராக கே.பி.தேவானந்தம், பொருளாளராக எம்.பாலமுருகன், துணைச் செயலாளர்களாக எஸ்.யுவராஜ்லு, பி.ஜே.காமாட்சி மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக 10 பேர்  நியமிக்கபட்டு உள்ளனர். 

News January 29, 2025

ஜனவரி 31ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை

image

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வரும் ஜனவரி 31ஆம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள மாவட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

News January 29, 2025

தொழிற்சாலை பஸ், கார், லாரி அடுத்தடுத்து மோதி விபத்து

image

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த இருங்காட்டுக்கோட்டை அருகே நேற்று அதிகாலை கார் ஒன்று சென்னை நோக்கி சென்ற கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் விபத்தில் உயிரிழந்த குதிரையை பார்த்த ஓட்டுனர், காரின் வேகத்தை குறைத்தார். இதை சற்றும் எதிர்பாக்காத பின்னால் வந்த, தொழிற்சாலை பேருந்து மற்றும் ‘ஈச்சர்’ லாரி அடுத்தது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

News January 28, 2025

லஞ்சம் பெற்ற மின்வாரிய அதிகாரிகள் கைது

image

வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் கேரளவைச் சேர்ந்த மணிகண்டன், வீட்டுமனை கட்டுமான பணிகளை மேற்கொள் மின் இணைப்பு வழங்க கோரி விண்ணப்பித்தார். இதற்கு அவரிடம், மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் ஜெய ரவிகுமார் (48), உதவி பொறியாளர் பூபாலனுக்கு ஆகியோர் லஞ்சம் கேட்டுள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில் ரூ.5000 லஞ்சம் பெற்ற இருவரும் கையும் களவுமாக பிடிப்பட்டனர்.

error: Content is protected !!