India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்தூர் முருகன் கோயில் சுமார் 900 ஆண்டுகளாகப் பக்தர்களால் வழிபடப்படுகிறது. 12ஆம் நூற்றாண்டில் 2ஆம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இக்கோயில், 1726ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்ப்படுத்தப்பட்டது. இக்கோயில், 84 படிகளுடன் கட்டப்பட்டது. இன்று (பிப்.2) தை ஞாயிறு முன்னிட்டு காலையில் சிறப்பு பூஜை நடைப்பெற்றது. விடுமுறை நாள் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.
பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பூக்கடை சத்திரத்திற்கு மல்லிகைப்பூ வரத்து வெகுவாக குறைந்துள்ளது. தை மாத முகூர்த்த தினமான இன்று திருமணம், கிரஹபிரவேசம், வளைகாப்பு உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடப்பதால், மல்லிப்பூ தேவை அதிகரித்துள்ளது. நேற்று 1 கிலோ ரூ.3,000க்கு விற்கப்பட்டது. விலை அதிகரித்தாலும், மல்லிகைப்பூ கிடைத்தால் போதும் என பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு அலுவலர் (1), சமூகப் பணியாளர் (2) வேலை வழங்கப்படும். 42 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக ரூ.27,804 வழங்கப்படும். 6ஆம் தேதிக்குள் <
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், சிசேரியனை காட்டிலும், சுகபிரசவங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன. நான்கு ஆண்டுகளில், 12,978 சுகபிரசவங்கள் நடந்த நிலையில், 9,082 சிசேரியன் பிரசவங்கள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக தாய் – சேய் சிகிச்சையை இம்மருத்துவமனை வழங்குகிறது என்பது குறிப்பிடித்தக்கது
காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவ சேவை இலவசமாக செய்யப்படுவதுடன் ரூபாய் 12000 உதவித்தொகையாக வழங்கப்படும் என கல்லூரியின் வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கே.வி ராஜசேகர், கூடுதல் துணைவேந்தர் சி ஸ்ரீதர், இணை துணை வேந்தர் கிருத்திகா, கல்லூரி இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் மற்றும் கல்லூரி மருத்துவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பென்னலூர் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகளுக்கு மத்தியில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் ஸ்க்ராப் குடோன் வைத்துள்ளார். இந்நிலையில் இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தவகலறிந்து விரைந்து வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் இவரது மனைவி சத்யா இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு எச்சூரை நோக்கி வல்லம் சிப்காட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கிரேன் மோதியதில் இருவரும் கீழே விழுந்ததில் சத்யா மீது கிரேன் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீனிவாசன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், “ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெறுவதை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்கள் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (30.01.2025) தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, உதவி ஆட்சியர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.