India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
காஞ்சிபுரம் சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பிப்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (12.02.2025) மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மலர்விழி இருந்தார்.
காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான, ‘காஞ்சி யூத் பிரீமியர் லீக்’ கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. நேற்று (பிப்.11) காஞ்சி வாரியர்ஸ் அணியும், காஞ்சி ராயல்ஸ் அணியும் மோதின. இதில் காஞ்சி வாரியர்ஸ் அணியைச் சேர்ந்த இளையனார்வேலு கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஹேமேஷ் குமார் (16), காஞ்சி ராயல்ஸ் அணிக்கு எதிராக 82 பந்துகளில் 203 ரன்கள் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே <
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் குன்றத்தூர் – மாங்காடு சாலையில் உள்ள கார்த்திக் பேலஸ் திருமண மண்டபத்தில் மாவட்ட அவை தலைவர் த.துரைசாமி தலைமையில் நடக்கிறது. இல்கூட்டத்தில், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள கலந்து கொள்வர்.
மதுரையைச் சேர்ந்த செல்வம் (47), ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள மேவளூர்குப்பம் பகுதியில் பெனாயில், லைசால், ஆசிட் உள்ளிட்ட கழிப்பறை உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடை அருகே, நேற்று திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், கடையின் ஷட்டரை உடைத்து தீயை அணைத்தனர். அதற்குள், ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வரும் 12ஆம் தேதி மாலை கோயில் உள்ளே உள்ள அனந்த சரஸ் குளத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி தெப்ப உச்சத்தில் காட்சி அளிக்க உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: உணவியல் நிபுணர் (Dietician) – 1, ஆய்வக நுட்புநர் நிலை – 2 (Lab.Technician II), பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர் என 276 பணியிடம் காலியாக உள்ளது. விண்ணப்ப படிவங்களை https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற தளத்தில் வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. பணியாளர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். <
Sorry, no posts matched your criteria.