India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்சங் தொழிற்சாலையில் 3 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து தொடர்ந்து 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னையில் இன்று தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற்ற 3வது கட்டமாக நடைபெற்ற சாம்சங் பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தின் பணியிட நீக்கத்தை திரும்ப பெறாததால் உடன்பாடு ஏற்படவில்லை. இன்று மாலை காஞ்சிபுரத்தில் அடுத்த கட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் வேளாண் உழவர் நலத்துறை சார்பில், ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி, மின்னணு முறையில் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆதார எண் போன்று தனித்துவமான அடையாள அட்டை எண் வழங்க, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தின் பட்டா நகல், ஆதார், கைபேசி எண் போன்ற ஆவணங்களை கொடுத்து விவசாயிகள் பயனடையலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <
பழைய சீவரம், ஓரிக்கை துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.15) மின்பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக, காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பழையசீவரம், வாலாஜாபாத், தென்னேரி, ஊத்துக்காடு, நெற்குன்றம், தேவரியம்பாக்கம், சின்ன காஞ்சிபுரம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், திருக்காலிமேடு, ஓரிக்கை, கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் / நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்திலிருந்து (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஏனாத்தூரில் உள்ள கால்நடை பயிற்சி மையத்தில் (FTC) வியாழன் (பிப்.13) மகளிர் திட்டம் மூலமாக சமூக வளம் காக்கும் பயிற்றுனர்களுக்கு மூலிகை சாகுபடி பற்றி டாக்டர் பிரேமா வள்ளி அவர்கள் பயிற்சி அளித்தார். துளசி செடி, ஆடாதோடா, போன்ற மூலிகை செடி வகைகளைப் பற்றியும், மூலிகைகள் பயன்படுத்தும் முறை பற்றியும் பயிற்சிகள் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பயிற்சி வெள்ளி 14 அன்றும் நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் நியமித்துள்ளார். அதன்படி மாவட்ட தலைவராக கே.ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளராக ஜ.பாஸ்கர், மாவட்ட பொருளாளராக அ.விஜய் பிரபு, மாவட்ட செய்தி தொடர்பாளர் மோ.கோபி ஆகியோரை நியமனம் செய்து பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து சிறப்பாக செயலாற்ற வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெல்லியில் யுஜிசியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தது தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.
2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகள் சட்டமன்றக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசு வழங்கப்படும். முதல் பரிசு ரூ.10 லட்சம், 2ஆம் பரிசு ரூ.5 லட்சம், 3ஆம் பரிசு ரூ.3 லட்சம். விண்ணப்பப் படிவத்திற்கு <
கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் ட்ரோன் பயன்படுத்த மத்திய அரசு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது, பயிற்சி அளித்தது. இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிளார் ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவுக்கு பயிற்சி அளிகப்பட்டு, ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள், இக்குழுவை 8248716615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.