India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலகுமாரன், வித்தியா தம்பதி. இவர்களது இரண்டரை வயது குழந்தை ஆருத்ரா. நேற்று மாலை வித்தியா துணிகளை காய வைப்பதற்காக அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்று துணியை காய வைத்துள்ளார். அப்போது குழந்தை ஆருத்ரா மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது.
காஞ்சிபுரம் கோவில் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம், காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று (மார்.9) நடந்தது. முகாமில், 227 பேர் பங்கேற்றனர். இதில், நோயின் தன்மைக்கேற்ப மருந்து வழங்கப்பட்டது. கண்புரை குறைபாடு உள்ள 75 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 45 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த <
செரப்பனஞ்சேரியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (31). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், கடந்த 5ஆம் தேதி ரூ.5,000 பணத்துடன் காரில் சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். பணத்தை காரில் வைத்துவிட்டு, சார் பதிவாளர் அலுவலகம் சென்றுவிட்டு திரும்ப வந்துபார்த்தபோது பணம் காணாமல்போனது. ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் வருவதுபோல் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காமாட்சி அம்மன் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தையொட்டி 7ஆம் திருநாள் நிகழ்ச்சியாக நேற்று (மார்.9) நடைபெற்ற தேரோட்டத்தில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்மன் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். புல்லாங்குழல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஒட்டுமொத்த காஞ்சிபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இது சகல தோஷங்களும் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது. இது சூரியனின் அம்சத்துடன் திகழும் ஆலயமாக உள்ளது. மேலும் வேலை வாய்ப்பு கிடைக்க பக்தர்கள் இங்கு தரிசனம் செய்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் சிகப்புவஸ்திரம், எருக்க இலை, கோதுமை தானியம் கொண்டு வழிபட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் அருளை தருகிறார். ஷேர் பண்ணுங்க.
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
குன்றத்துார் அடுத்த கலெடிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூசம்மாள் (75). இவர், நேற்று (மார்.8) ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் பூசம்மாள் தூக்கி வீசப்பட்டு பலியானார். அப்போது அதே வழியில் சென்ற மற்றொரு லாரி, விபத்து ஏற்படுத்திய லாரியின் பின்னால் மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் சேதமாகி ஓட்டுநர் இளவரசு (38) காயமடைந்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் திருமாள் (26). சிவில் இன்ஜினியரான இவர் படப்பை அருகே உள்ள ஒரகடத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.3 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் கடனாளியான இவர், படப்பை அருகே ஆதனுார் வழியாக பைக்கில் கடந்த 1ஆம் தேதி சென்றார். அப்போது, அவ்வழியே சென்ற 70 வயது மூதாட்டியிடம் 3 சவரன் செயினை பறித்து தப்பி சென்றார். போலீசார் ஆரை நேற்று (மார்.8) கைது செய்தனர்.
ஜப்பான் தொழிலதிபர் கோபால் பிள்ளை சுப்பிரமணி தலைமையிலான 40 பேர் அண்மையில் தமிழ்நாடு வந்தனர். காஞ்சிபுரம் அருகே கிளார் கிராமத்தில் உள்ள அகத்தீஸவரர் கோயிலுக்கு நேற்று (மார்.8) வந்தனர். அப்போது, கோயிலில் உலக நன்மைக்காக ருத்ரயாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் ஜப்பானியர்கள் பங்கேற்று யாக குண்டத்தில் பொருட்களை போட்டனர். இந்தப் பகுதி மிகவும் அமைதியான இடமாக இருப்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.