Kanchipuram

News March 26, 2025

இரு லாரிகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

image

விருத்தாசலத்தில் இருந்து நேற்று (மார்.25) அதிகாலை லாரி ஒன்று வந்தவாசி நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. லாரியை விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி (55) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, பெருநகர் பூமாசெட்டிகுளம் அருகே லாரி சென்றபோது, எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதியது. இதில், எதிரே வந்த லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் (45) சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.

News March 25, 2025

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்: ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக 05 ஒப்பந்த பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விவரங்கள் https://kancheepuram.nic.in தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களுடன் ஏப்ரல் 10 மாலை 05.45 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 25, 2025

ராஜினாமா கடிதம் அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

image

காஞ்சிபுரம், குன்றத்தூர் ஒன்றியம் ஆதனுர் ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த தமிழமுதன் பதவி வகித்து வந்தார். ஆதனூர் ஊராட்சியில் கொருக்கந்தாங்கள், பள்ளஞ்சேரி, டி.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் ஆட்சியர் நெருக்கடி கொடுப்பதாக கூறி தமிழ் அமுதன் தனது ராஜினாமா கடிதத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 25, 2025

321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று (மார்.24) மக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு குவிந்தனர்.

News March 25, 2025

ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இதுநாள் வரை பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News March 25, 2025

கால் வலியால் முதியவர் எடுத்த விபரீத முடிவு

image

திருவண்ணாமலை மாவட்டம் சுருட்டல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (60). இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காலில் காயம் ஏற்பட்டு தொடா்ந்து வலி இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் (மார்.23) வலி அதிகமாக இருந்ததால், அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துள்ளாா். உறவினர்கள் அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தது தெரிந்தது.

News March 25, 2025

காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வரும் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் இந்த முகாமில், முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. சுமார் 5,000 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளன. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

News March 24, 2025

காஞ்சிபுரத்தில் வேலை வாய்ப்பு முகாமில் 75 பேருக்கு பணி ஆணை

image

காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்தூர் சந்திரசேகருக்கு சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை சார்பில், வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த வேலை வாய்ப்பு முகாமில், 30 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 75 பேருக்கு வேலை வாய்ப்புக்காக ஆணை வழங்கப்பட்டது. ஏனாத்தூர் சந்திரசேகருக்கு சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை துணைவேந்தர் ஸ்ரீநிவாசு, சார்பு துணைவேந்தர் வசந்தகுமார் மேத்தா உட்பட பலர் பங்கேற்றனர்.

News March 24, 2025

திருமணமான தம்பதிகள் ஒற்றுமையாக வாழ

image

காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற ஆதிகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். இங்கு வந்து வேண்டினால் திருமணத்தடை நீங்கும், திருமணமான தம்பதிகள் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையாக வாழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க.

News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!