India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குன்றத்தூர் ஒன்றியம் படப்பை பஜாரில் அமைத்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் வாசலில் ஒருவர் குடித்துவிட்டு அவர் வந்த நான்கு சக்கர வாகனத்தை பொதுமக்களுக்கு இடையூறாக நிறுத்திவிட்டு அச்சாலையில் ஓரமாக சுமார் நான்கு மணி நேரமாக உறங்கிக் கொண்டிருந்தார். இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. மேலும் 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 700 நாள்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தை விட்டு வெளியேறுவதாக விமான நிலைய குழு அறிவித்த நிலையில், இதனை சட்டமன்ற கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மனு அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், கள்ளச்சாராயம் விற்பனை செய்த 17 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து 162 கிலோ எரி சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கள்ளச்சாரய தடுப்பு நடவடிக்கை குறித்து நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றை தடுத்திடும் பொருட்டு அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார்.
பௌர்ணமி கிரிவலம் செல்லும் திருவண்ணாமலை யாத்ரீகர்களின் வசதிக்காக தாம்பரம் -திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாளை (ஜூன்.21) மதியம் 12.00 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து ஜூன்.22 அன்று (சனிக்கிழமை) காலை 08.00 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
காஞ்சிபுரம் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காஞ்சி குடில் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தனது 120 ஆண்டுகால பழமையால் பெருமிதம் கொள்கிறது. காஞ்சி எஸ்.வி.என் பிள்ளை தெருவில் உள்ள இதில் வீட்டு உபகரணங்கள், ஆடைகள், நாணயங்கள், கைவினைப் பொருட்கள் என பிற அன்றாட உபயோகப் பொருட்களை காணலாம். காஞ்சி குடில் ஒரு சுற்றுலா தளமாக மட்டுமல்லாமல், கலாச்சாரத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள், வருவாய் துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மேயருக்கு எதிராக ராஜினாமா முடிவுடன் போர்க்கொடி துாக்கியுள்ள தி.மு.க., கவுன்சிலர்களுடன், அமைச்சர் நேரு சமாதான பேச்சு நடத்தவுள்ளார். மேயர் மகாலட்சுமியின் கணவர், மாநகராட்சி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்ததால், 33 கவுன்சிலர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால், மேயர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வந்ததால், இன்று 2ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.