Kanchipuram

News August 2, 2024

அனிதா சம்பத் கூறியது பொய் செய்தி

image

கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு, நடைபாதை, படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக ரூ.11.36 லட்சம் செலவு செய்யப்பட்டது குறித்து நடிகை அனிதா சம்பத் அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், இத்தகவல் தவறானது என்றும், நடைபாதை, படிக்கட்டு, நீர் வரத்து, மின் விளக்கு, சிமெண்ட் இருக்கைகள் என மொத்தம் ₹11 லட்சம் செலவிடப்பட்டதாக தமிழ்நாடு Fact Check விளக்கமளித்துள்ளது.

News August 1, 2024

காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம்

image

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 290 நபர்களை இழந்து உள்ளதால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கிழக்கு ராஜா கோபுரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆன்மா சாந்தி அடைய சங்கர மாதத்தில் மடாதிபதி விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் வேண்டுகோளுக்கிணங்க மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

News August 1, 2024

முதல்வர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கல்

image

காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளத்தில் இன்று நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆகியோர் வழங்கினர்.

News August 1, 2024

மத்திய அரசு 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்

image

குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டுமென காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவியல் சட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பது குறித்து 4 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டது. இந்த 3 சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

News August 1, 2024

கல்விக்கடன், ஸ்கூட்டர் வழங்கிய அமைச்சர் த.மோ.அன்பரசன்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், 184 பயனாளிகளுக்கு ரூ.8.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா். மேலும், 383 மனுக்கள் மீது தீா்வு காணுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். மாணவா்களுக்கு ரூ.5.63 கோடி மதிப்பில் கல்விக் கடன், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.72 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டா்கள் ஆகியவை வழங்கினார்.

News August 1, 2024

சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

image

வார இறுதி விடுமுறை, அமாவாசையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளம்பாக்கத்தில் இருந்து 2ஆம் தேதி 295 பேருந்துகள், 3ஆம் தேதி 325 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து, 2, 3 ஆகிய தேதிகளில் தலா 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆக.4ஆம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

News July 31, 2024

பூட்டிய வீட்டில் சடலமாக கிடந்த மகன்

image

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது வீட்டினுள் இருந்த ஒரு அறையில் இளைஞர் (24) ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. அவர் இறந்தது கூட தெரியாமல் மற்றொரு அறையில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் இருந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News July 31, 2024

தமிழ் பெயர் வைத்த பெற்றோர்களுக்கு பரிசு

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று விலையில்லா பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடை வழங்கினார். நிறைய மாணவர்களின் பெயர் வடமொழியில் இருந்தது. அப்போது, 2 மாணவர்களுக்கு பேரழகி, இனியவன் என தமிழ் பெயர் வந்ததால், அவர்களின் பெற்றோர்களுக்கு எம்எல்ஏ எழிலரசன் பரிசு வழங்கி பாராட்டினார்.

News July 31, 2024

பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களை ஒன்றிணைத்து, 5000 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு எல்லைகள் அமைக்க அனுமதி அளித்திருப்பதாக மத்திய அரசு நிபுணர் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News July 31, 2024

காஞ்சிபுரம் வரும் முதல்வர் ஸ்டாலின்

image

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வள்ளம் பகுதியில், தொழிற்சாலையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்காக அரசு சார்பில் புதிதாக பெண்கள் விடுதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. 18,720 படுக்கைகள் கொண்ட இந்த விடுதியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி நேரில் வந்து திறந்து வைக்க உள்ளார். இதனால், பாதுகாப்பு குறித்து போலீசார் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!