India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம் வடகால் பகுதியில் ரூ.706.5 கோடி மதிப்பில் 18,420 படுக்கைகள் கொண்ட மகளிர் விடுதியை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க வருகை தந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பூ கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார், உடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, கணேசன், அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று 14 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் சார்பில், ஸ்ரீபெரும்புத்தூரில் உள்ள வல்லம் படுகால் பகுதியில் ரூ.706 கோடியில் பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக 18,720 படுக்கைகள் கொண்ட தொழிற்சாலை பணியாளர்கள் தங்குவதற்கான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக தேமுதிக நாள்தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றோம் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது தான் தேமுதிக. ஓட்டு போட உரிமை உள்ள அனைவரும் முதல்வராக உரிமை உள்ளது. மக்கள் தான் எஜமானர்கள். அதனால், ஜாதி மதத்திற்கு இங்கு வேலை இல்லை” எனத் தெரிவித்தார்.
தமிழக அரசு வழங்கக்கூடிய மகளிர்க்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதிவு செய்யாதவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 17, 18,20 ஆகிய நாட்களில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுவதாக செய்தி பரவியது. இது பொய்யான தகவல் என்றும் இதில் எந்த உண்மையும் இல்லை யாரும் இதனை நம்ப வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற கோவிலாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை ஒட்டி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். இதில், கோவில் நிர்வாகம் சார்பில் பிரேமலதாவுக்கு பிரசாதம் மற்றும் சுவாமி புகைப்படம் அளித்தனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த 42 மாதங்களில் 2952 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவன் நகர் நியாயவிலை கடையினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவுத்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் ஆய்வின்போது உடன் இருந்தனர். அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், இன்று (ஆக.16) காலை 9.30 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று, 1,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு நோ்முகத் தோ்வு நடைபெறும். 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்த 18 – 35 வயதுக்கு உட்ப்பட்டவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.1.74 கோடிக்கு கையெழுத்தானது. பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு
ரூ.1.74 கோடி மதிப்பில் கையெழுத்தானது
Sorry, no posts matched your criteria.