Kanchipuram

News August 19, 2024

மாற்றுத்திறனாளி குழந்தையின் தாய்க்கு உடனடி உதவி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தையின் தாயார் வழங்கிய மனுமீது உடனடி நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தனர்.

News August 19, 2024

காஞ்சிபுரத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 19, 2024

காஞ்சியில் திரு பவித்ர உற்சவம் முதல் நாள் கோலாகலம்

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள 108 தீப தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று திரு பவித்திர உற்சவத்தை ஒட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் கண்ணாடி அருகில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

News August 19, 2024

விபத்தில் மூளை சாவை அடைந்த இளைஞர் உடல் உறுப்பு தானம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் அருகே மொளச்சூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் இளங்கோ என்பவர் 10 நாட்களுக்கு முன்பு சென்னை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. சிகிச்சை அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்ட நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. இவரது குடும்பத்தாரின் இச்செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News August 19, 2024

பரந்தூர் விமான நிலைத்திற்கு நிலம் எடுக்க அரசாணை

image

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு, நிலம் எடுப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ், பரந்தூரில் 150 ஏக்கர், வளத்தூரில் 3 ஏக்கர், நாகப்பட்டில் 43 ஏக்கர் என நிலப் பகுதிகளை கையகப்படுத்தப் போவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஆட்சேபனை இருக்குமானால், தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 19, 2024

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறப்பு விருது

image

ஸ்ரீ பெரும்புதூரில் பெண் தொழிலாளா்களுக்காக ரூ.706 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிவதற்காக அதிக அளவில் கடன் வழங்கி சிறப்பாக செயல்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினாா். விருதை, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் க.சிவமலா் பெற்றுக்கொண்டாா்.

News August 18, 2024

18,720 பெண்கள் பயன்பெறுவார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

image

சிப்காட் மெகா குடியிருப்பு மூலம் 18,720 பெண்கள் பயன்பெறவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த குடியிருப்பை முழுவதுமாக பாக்ஸ்கான் நிறுவனம் எடுத்து கொள்கிறது. பணிபுரியும் பெண்களுக்கென்று தனி கிராமமே அங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இந்த கட்டிடத்திற்கான முழு நிதியை தமிழக அரசு தான் கொடுத்துள்ளது” என்றார்.

News August 18, 2024

ஸ்ரீபெரும்புதூரில் மெகா குடியிருப்பு வளாகம் 1/3

image

இந்தியாவிலேயே முதன் முறையாக தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்காக சிப்காட் சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.706.50 கோடி செலவில் 18,720 படுக்கைகள் கொண்ட மெகா குடியிருப்பு வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். முன்னதாக வளாகத்தில் மரக்கன்றினை நட்ட அவர், பின்னர் வளாகத்தைத் திறந்து வைத்து பெண் பணியாளர்களுக்கு குடியிருப்புக்கான சாவிகளை வழங்கினார்.

News August 18, 2024

ஸ்ரீபெரும்புதூரில் மெகா குடியிருப்பு வளாகம் 2/3

image

இந்த வளாகம், தரைத்தளம் மற்றும் 10 அடுக்குமாடி கட்டிடமாக 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 பிரிவுகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில், ஒவ்வொரு பிரிவிலும் 1,440 நபர்கள் தங்கும் வகையில் 240 அறைகள் அமைந்துள்ளது. இங்கு குடிநீர், துணை மின் நிலையம், நவீன தீயணைப்பு வசதிகள், உட்புறச் சாலைகள், தெருவிளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

News August 18, 2024

ஸ்ரீபெரும்புதூரில் மெகா குடியிருப்பு வளாகம் 3/3

image

ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், இந்தியாவில் 2ஆவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருவதோடு, பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் தமிழகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்” என்றார்.

error: Content is protected !!