India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே கன்னிகுளம் ஊராட்சியை சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம். இவருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் பிரியதர்ஷினி என்ற மகள் உள்ளார். இவர் தனது சிறு சேமிப்பு பணமான ரூ.500-யை வயநாடு நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இடம் அளித்தார். சிறிய வயதில் பெரிய மனது கொண்ட இச்சிறுமியின் இச்செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 01.01.2025 அன்று தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2025 பணிகள் 20.08.2024 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் இல்லம் தேடி வரும் போது வாக்காளர்கள் தங்களது பெயர், வயது, புகைப்படம், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கி கிராமப்புற பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மந்தைவெளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27.08.24 -ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இம்முகாமினை பயன்படுத்தி உரிய ஆவணங்களுடன் மனுஅளித்து பயனடையுமாறு ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 27.08.24-ஆம் தேதி காலை 10.00 மணிக்கு, அமைச்சர் தா.மோ. அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே தனியார் மரப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 4 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இன்று காலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் மர இழைப்பு பட்டறையில் பணி செய்து கொண்டிருந்த போது அங்கு இருந்த பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வடமாநில தொழிலாளி ராஜ்பவன்(22), அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இருவரும் தீ விபத்தில் சிக்கினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் காலனி, அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்), மரு.கோபிநாத், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.செந்தில், முதன்மைக் கல்வி அலுவலர் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள் இவைகள் தான். ஏகாம்பரேஸ்வர் கோயில், காமாட்சியம்மன் கோயில், கைலாசநாதர் கோயில், காஞ்சி காமகோடி பீடம், காஞ்சி குடில், தென்னங்கூர் பாண்டுரங்க கோவில், ஜெயின் கோவில்கள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என முக்கிய சுற்றுலாத் தலங்களையும், திருத்தலங்களும் காஞ்சிபுரத்தில் உள்ளன.
காஞ்சிபுரத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம், இன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள டீக்கடை பெஞ்ச் பாய்ஸ் மற்றும் கம்மாளம்பூண்டி கிராம இளைஞர்கள் சார்பாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அத்தியூர், மேட்டுப்பாளையம் போன்ற கிராமங்களிலும் மற்றும் ஏரி கரை சுற்று பகுதிகளிலும் நட்டு சூழலுக்கு நன்மை செய்யும் விதமாக இப்பணிகளை இந்த இளைஞர்கள் மேற்கொண்டனர். இவர்களின் இச்செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தின விழாவை ஒட்டி சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள பொன்விழா கலையரங்கில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.