India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், மாவட்ட, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைச்சரின் குறைதீர் கூட்டத்தில் ரூ.8.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 184 பயனாளிகளுக்கு காஞ்சிபுரத்தில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் வழங்கினார். இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகரைச் சேர்ந்த பாலமுருகன்(33), துறைமுகத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு நேற்று இரும்பு உருளைகள் ஏற்றிக் கொண்டு லாரியில் சென்றுள்ளார். மாதவரம் அருகே லாரியை சாலையோரம் நிறுத்தி, லாரியிலேயே படுத்துள்ளார். அப்போது, மற்றொரு லாரி ‘ரிவர்ஸ்’ எடுத்தபோது, பாலமுருகனின் லாரியின் மீது மோதியது. இதில், லாரியில் இருந்த இரும்பு உருளை லாரிக்குள் விழுந்ததில், பாலமுருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில்களை தரிசிக்க, தமிழக போக்குவரத்து துறை சார்பில் ரூ.650 கட்டணத்தில் ஒருநாள் ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.20 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி, காஞ்சிபுரம், கோவிந்தவாடி, திருத்தணி, திருவாலங்காடு, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய கோயில்களுக்கு சென்று மீண்டும் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தடையும். <
உலகளந்த பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நாளை நடைபெறுகிறது. இன்று காலை, ஹோமம், பூர்ணாஹூதி, வேதப்பரந்த சாற்றுமறையும், மாலை ஹோமும், பூர்ணாஹூதி, வேதப்ரபந்த சாற்றுமறை உள்ளிட்டவை நடக்கிறது. மஹா சம்ப்ரோக்ஷண தினமான நாளை காலை 10:30 – 11:30 மணிக்குள் மஹா சம்ப்ரோக்ஷணம் என அழைக்கப்படும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து, வேதபிரபந்த சாற்றுமறையும், மாலை 6:30 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான அறிவிப்புகளை மாவட்ட ஆட்சியர் முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி, இப்போட்டிகளில் பங்கேற்க நேற்று (ஆக.25) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பலரது கோரிக்கையை ஏற்று பதிவு செய்யவதற்கு செப்.2-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை காஞ்சிபுரம் விளையாட்டு அலுவலர் ஜி.சாந்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நாளை (ஆக.27) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள், இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலையைச் சேர்ந்தராஜேந்திரன்(26), குன்றத்தூர் அடுத்த எருமையூரில் தங்கி நெடுஞ்சாலை துறையில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்த டிரைவராக வேலை செய்து வந்தார். இவர், நேற்றிரவு பைக்கில் வண்டலூர் – மீஞ்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
கீழ் கதிர்பூர் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 600 ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்களுக்கு, பட்டா கேட்டு பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கீழ் கதிர்பூரில் அனாதீன நிலங்களுக்கு பட்டா வழங்குவது, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து அடங்கல் சான்று வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் செப்.10ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களின் விபரங்களை, வரும் அக்.18ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்க்க உள்ளனர். குடும்பத்தில் எத்தனை பேர் வாக்காளர்களாக பதிவு செய்துள்ளார்கள், விடுப்பட்ட வாக்காளர்களை சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தால் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ள செயலி வழியாக ((BLO APP) பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.