Kanchipuram

News September 3, 2024

துளசிமதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை துளசிமதி, பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இறுதி சுற்றில் தோல்வியடைந்தார். இருப்பினும், வெள்ளிப் பதக்கத்தை வென்ற அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி பதக்கம் வென்ற துளசிமதிக்கு வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

News September 3, 2024

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது

image

காஞ்சிபுரம் மாநகராட்சி கூடம் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. சுமார் 8 மாதங்கள் கழித்து இன்று, காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், மேயர் மகாலட்சுமி தலைமையில் தொடங்கியது, இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அண்மையில், மேயருக்கு எதிராக, அனைத்து கட்சி கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கிய நிலையில், நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்தது.

News September 3, 2024

60 தொழிற்சாலைகள் மூடல்: ரூ.6.70 கோடி அபராதம்

image

கடந்த 5 ஆண்டுகளில், காஞ்சிபுரத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 60 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகள், கழிவுநீர் உள்ளிட்டவை பொது இடங்களில் கொட்டுவதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 12 தொழிற்சாலைகளுக்கு, ரூ.6.70 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News September 3, 2024

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி சடலமாக மீட்பு

image

படப்பை அடுத்த ஆதனுார் மகாலட்சுமி நகரில் உள்ள சாலையோர கிணற்றில், இறந்த நிலையில் ஆண் சடலம் மிதந்தது. தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் ஆதனுார் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ரவுடி தனசேகர்(27) என்பதும், இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

News September 3, 2024

அய்யம்பேட்டை சாலை விபத்தில் பெண் பலி

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலடித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்புக்கரசி(37). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இவர், நேற்று பிற்பகல் சுமார் 12 மணிக்கு, கணவர் லோகநாதனுடன் பைக்கில் காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அய்யம்பேட்டை அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி பைக் மீது உரசியதில் அன்புகரசி லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 3, 2024

வெள்ளி வென்ற துளசிமதிக்கு முதலமைச்சர் வாழ்த்து

image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பேட்மிட்டன் வீராங்கனை துளசிமதி பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். வெள்ளி வென்ற துளசிமதிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துளசிமதிக்கு அர்ப்பணிப்பும், தளராத மனப்பான்மையும், உன்னை நினைத்து மிகவும் பெருமையாக இருப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News September 3, 2024

வீடு முழுவதும் பதக்கங்களைக் குவித்த வீராங்கனை

image

பாரா ஒலிம்பிக் போட்டியில், பேட்மின்ட்டன் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவி துளசிமதி(22) காஞ்சிபுரம், பழைய ரயில்வே சாலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகள் ஆவார். கால்நடை மருத்துவ அறிவியல் பயின்று வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் சிறுவயதிலிருந்து தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறார். துளசிமதி வீடு முழுவதும் பதக்கங்களால் நிறைந்து காணப்படுகிறது. இவரது தந்தை தான் துளசிக்கு பயிற்சியளித்துள்ளார்.

News September 2, 2024

காஞ்சியில் சிறுமிக்கு மருத்துவ உதவி வழங்க கோரி மனு

image

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் பிரியா தம்பதியினருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், குழந்தைக்கு மருத்துவ உதவி வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். குழந்தை பிறப்பின்போது இடது பக்க மூளையில் ரத்தக் கசிவு உள்ளதால், வலது புறம் கால் செயல் இழந்து உள்ளதாக மருத்துவர் தெரிவித்த நிலையில், குழந்தையை காப்பாற்ற குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவ உதவிக்காக மனு அளித்தனர்.

News September 2, 2024

செம்பரம்பாக்கம் ஏரியில் 1.2 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது

image

செம்பரம்பாக்கம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் மூலம் சென்னை மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. தற்போது 4.88 டி.எம்.சி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. 3.6 டி.எம்.சி. கொள்ளளவுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் 1.2 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பு உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.

News September 2, 2024

பாரா ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் காஞ்சி மாணவி

image

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசி மதி என்ற மாணவி மகளிர் பாரா பேட்மிண்டன் பிரிவு இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை யங்கை எதிர்த்து இன்று இரவு 8 மணிக்கு மோதுகிறார். ஏற்கனவே வெள்ளி பதக்கம் உறுதியான நிலையில் இந்த போட்டியில் வென்றால் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கத்தை காஞ்சியை சேர்ந்த மாணவி பெற்றுத்தருவார்.

error: Content is protected !!