India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த வாரம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் 96 தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுன்சிலா் தொடுத்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரை பதிலளிக்க கோரி உத்தரவிட்டுள்ளது. காஞ்சியில் இவ்வழக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆங்காங்கே விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அரசின் வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சிலை அமைக்க காஞ்சிபுரம் உட்கோட்டாட்சியர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டாட்சியரிடம் 307 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை, பரிசீலனை செய்து குறிப்பிட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.850 கோடி திட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம் செய்துள்ளார். அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியுசர்கள் உற்பத்தி மையத்தை நிறுவ ரூ.100 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க ரூ.500 கோடியிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தோட்டக்கலை துணை இயக்குநரான மோகன் என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அவருக்கு பதிலாக, சென்னை தோட்டக்கலை அலுவலகத்தில், உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த லட்சுமி என்பவர், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநராக நியமிக்கப்பட்டு நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்று கொண்டார்.
காஞ்சிபுரம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், சமுதாய அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் செப்.13ஆம் தேதிக்குள், திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலகம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம், படப்பை, குன்றத்தூர் பகுதிகளில் உள்ள உழவர் சந்தைகளில் பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்கள் 15 வகையான பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். விநாயகர் சிலைகள் அளவுக்கேற்ப ரூ.75-150 வரையும், பழ வகைகள் ரூ.100-200 வரையும், பொரி கடலை தொகுப்புகள் ரூ.50-100 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார். SHARE
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று மாவட்ட நிர்வாகமும், ஓசூரில் அமைந்துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் இணைந்து பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதையடுத்து, நாளையும் இம்முகாமின் இரண்டாம் கட்டம் நடைபெறவுள்ளது. இதனை உங்களுக்கு தெரிந்த வேலை தேடுவோருக்கு ஷேர் செய்து உதவவும்.
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்ட உத்திரமேரூர் ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில், 371 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. உத்திரமேரூர் பி.டி.ஒ., அலுவலக வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், ரூ.12 கோடியே 98 லட்சத்தில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கான பணி ஆணைகளை காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ. சுந்தர் ஆகியோர் வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இன்று மற்றும் நாளை (செப்.5, 6) காலை 10 மணி முதல் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய பெண்கள் தேவைப்படுகின்றனர். 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 19 முதல் 25 வயது வரை உள்ள பெண்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். உணவு, தங்கும் இடம், போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
பாரா பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில், காஞ்சிபுரத்தை சேர்ந்த துளசிமதி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவருக்கு பிறவியிலேயே இடது கை செயலிழந்த நிலையில், தன் தந்தையின் உதவியோடு போட்டிகளில் அசத்தி வருகிறார். இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அண்ணா பூங்காவில் இன்று துளசிமதிக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவரை பாராட்டலாமே!
Sorry, no posts matched your criteria.