India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு டிட்டோ இடங்களை தேர்வு செய்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வசிக்கும் சுமார் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தை சுமார் 245 ஏக்கர் நிலப்பரப்பில் மீள் குடியேற்ற டிட்டோ திட்டமிடப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு, சுற்றுசூழல் வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள உள்ளது.
உலக இயன்முறை மருத்துவ தினம் நாளை (செப். 8) ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப் பெருந்தகை, இதுகுறித்து ‘பலவித பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு, முதியோர்களுக்கு மிக சிறப்பாக இயன்முறை மருத்துவம் செய்கிற அனைத்து மருத்துவர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார்.
அந்த வகையில் காஞ்சிபுரத்தில் ரூ.100கோடியில் சென்சார்ஸ் , டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையம் அமைக்க விஷய் பிரிசிஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுடவுள்ளது .
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு 10ன் மணி வரை பரவலாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சி நகர் பகுதி, ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்பதூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த துளசிமதி முருகேசன் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்று சாதானை படைத்திருந்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழகத்தில் 10ஐஏஏஸ் அதிகாரிகளை துணை மற்றும் உதவி ஆட்சியர்களாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்பதூர் உதவி மாவட்ட ஆட்சியராக ஆஷிக் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்பதூர் கோட்டத்திற்குட்பட்ட நிர்வாக பணிகளை இனி இவர் மேற்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
பரந்தூர், ஏகனாபுரத்தில் விமான நிலையம் அமைக்க 234 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற வந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கான பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது. இது தொடர்பாக ஆலோசகர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் அரசு அறிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. எனவே காஞ்சிபுரத்தில் இன்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெளியில் செல்பவர்கள் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 307 விநாயகர் சிலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சிலை அமைக்க காஞ்சிபுரம் உட்கோட்டாட்சியர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டாட்சியரிடம் 307 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை, பரிசீலனை செய்து குறிப்பிட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி பெருவிழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பொதுமக்கள் அதிகளவில் பூக்கள் வாங்கி வரும் நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு ராஜவீதியில் அமைந்துள்ள பூக்கடை சத்தத்தில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மல்லி ஒரு கிலோ 600 ரூபாய்க்கும், முல்லை ஒரு கிலோ 150 ரூபாயும், சாமந்தி ஒரு கிலோ 320 ரூபாய்க்கு, ரோஜா கிலோ 240 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.