India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு சார்பாக நடைபெற்ற 2024-25 ஆம் நிதியாண்டுக்கான கூட்டம் இன்று (செப்.12) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ அருண்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் நிர்வாகிகளுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
மத்திய பட்டு வாரியத்தின் ஆண்டு அறிக்கை 2022-23ன் படி பைவோல்டின் (Bivoltine) இனப்பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு 2525 மெட்ரிக் டன் அளவு பட்டு உற்பத்தி செய்யப்பட்டது. குறிப்பாக காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், கோவை, சேலம், ஆரணி ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் பட்டு உற்பத்தி சிறந்து விளங்குவதாக அறிக்கை வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல எலக்ட்ரானிக் பொருள் தயாரிக்கும் சாம்சங் தொழிற்சாலையில் நான்காவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இங்கு, பணியாற்றி வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாட்களாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன்குராலா நிர்வாக காரணங்களுக்காக நீலகிரி, காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் பணிபுரியும் வரித்தண்டலர்கள், இளநிலை உதவியாளர்கள் என 19 பேர் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவர்கள் உடனடியாக பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் உட்பட புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பிற மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் இல்லை என மாநில தேர்தல் ஆணையர் பாலசுப்ரமணியன் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 2 மற்றும் குரூப் 2- ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு வரும் செப்.14-இல் நடைபெறவுள்ளது. இதில் தேர்வு எழுதுபவர்கள், தோ்வு மையம் செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து உத்தரமேரூா், ஸ்ரீபெரும்புதூா் ஆகிய வட்டாரங்களில் உள்ள தோ்வு மையங்களுக்குச் செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்படும் என ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் 2வது நிதி ஆண்டின் அறிக்கை தயாரிக்கும் கூட்டம் இன்று (செப்.12) காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கத்தில் நடைபெற உள்ளது. திட்ட முன் வரைவுகளை, மாவட்ட முதன்மை அலுவலர்களால், இறுதிபடுத்தப்பட உள்ளன. ஆகையால், வேளாண், பொது சுகாதாரம், கால்நடை உள்ளிட்ட 32 துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்து உள்ளார்.
சென்னையில் செப் 17-ஆம் தேதி திமுக பவளவிழா – முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதற்கு, காஞ்சி வடக்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், கழக அணிகளின் நிர்வாகிகள், கழகச் செயல் வீரர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆயிரக்கணக்கில் அலைகடலென திரண்டு வந்து பங்கேற்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டன் போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில், ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.