Kanchipuram

News September 16, 2024

காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி.க்கு புதிய பதவி

image

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காஞ்சிபுரம் முன்னாள் எம்.பி.விஸ்வநாதன், ஐதராபாத்தில் உள்ள காந்தி பவனில் தெலங்கானா மாநில மேலிட பொறுப்பாளராக நேற்று பதவியேற்றார். பதவி ஏற்கும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் அம்மாநில காங்கிரசார் விஸ்வநாதனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

News September 16, 2024

ஆட்சியர் அலுவலக முற்றுகையில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

image

ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் நிறுவன ஊழியர்கள் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரம் பொன்னேரி, செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தி அடைத்தனர்.

News September 16, 2024

ஶ்ரீபெரும்புதூரில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில் இரு நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், 12 பேர் பங்கேற்றனர். இரண்டாம் நாள் நிகழ்வான நேற்று 427 பேர் பங்கேற்றனர். இதில், வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றி இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

News September 16, 2024

செவிலியர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு

image

காஞ்சிபுரம், நல்லுாரில், ரூ.53 கோடி செலவில், 1.06 லட்சம் சதுர அடி பரப்பில் சங்கரா செவிலியர் மகளிர் கல்லுாரி கட்டப்பட்டுள்ளது. நேற்று இதனைத் திறந்து வைத்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “செவிலியர் பட்டப்படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. என்.எல்.பி., கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிப்பால், செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார்.

News September 16, 2024

மது அருந்த வராததால் கத்தியால் வெட்டிய நண்பர்கள்

image

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியில் மகேஷ்(24), சாகுல், ஜெகதீஷ், ஜெகன் ஆகிய 4 பேரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற இவர்களது நண்பர்கள் விஜய், செல்வகுமார் இருவரையும் மது அருந்த 4 பேரும் அழைத்தனர். அவர்கள் இருவரும் மது அருந்த வரவில்லை என கூறியதால், ஆத்திரமடைந்த 4 பேரும் விஜய் மற்றும் செல்வகுமாரை பீர் பாட்டிலால் தாக்கியதுடன் கத்தியால் வெட்டியுள்ளனர்.

News September 16, 2024

அண்ணா இல்ல வருகை பதிவேட்டில் உறுதியேற்ற அமைச்சர்

image

பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அண்ணா இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வருகை பதிவேட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைக்க திமுகவினர் இணைந்து உழைத்திடுவோம் என எழுதினார். இதனை திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.

News September 16, 2024

காஞ்சியில் அதிமுக பொதுக் கூட்டம்

image

அறிஞர் அண்ணா 116 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காஞ்சியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேஷன், மகளிர் அணி செயலாளர் பா வளர்மதி கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் திரளான கட்சிப் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

News September 15, 2024

பீர் பாட்டிலால் அடித்து கத்தியால் வெட்டிய சம்பவம்: 4 பேர் கைது

image

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம்(24), விஜய்(24) இருவரும், நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த ஜெகன்(23), ஜெகதீஷ்(22), சாகுல்(23), மகேஷ்(24) ஆகியோர் இருவரையும் வழிமறித்து மது குடிக்க அழைத்தனர். அதற்கு அவர்கள் மறுத்ததால், பீர் பாட்டிலால் தாக்கி, கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

News September 15, 2024

அதிமுகவை ஒன்றிணைக்காமல் ஓயமாட்டேன்: சசிகலா

image

அண்ணாவின் 116ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒன்றிணைக்கக் கூடிய பணிகள் சென்று கொண்டு இருக்கிறது. நிச்சயமாக தமிழக மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அதிமுகவை ஒன்றிணைக்காமல் ஓயமாட்டேன்” என்றார்.

News September 15, 2024

காஞ்சிபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் வேண்டுகோள்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் சமூக பாதுகாப்பு திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. அவர் கூறியதாவது, நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் தங்களது விண்ணப்பங்களுக்கான தெளிவுரையை, நேரடியாகவோ தொலைபேசி, இணையவழி வாயிலாகவோ சரி செய்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!