Kanchipuram

News September 17, 2024

காஞ்சிபுரத்தில் 40,918 பேருக்கு 100 நாள் வேலை

image

காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மூலம் 1.45 லட்சம் பேருக்கு 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40,918 பேருக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகின்றன. ஷேர் பண்ணுங்க.

News September 17, 2024

கிளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் அனுமதி கோரியது

image

பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ், காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க இன்று சுற்றுச்சூழல் அனுமதி கோரியது. இந்த தொழிற்சாலையானது, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.640 கோடியில் அமைய உள்ளது. இதற்காக கடந்த ஜனவரி மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

News September 17, 2024

மதுபோதையில் மனைவியை கொன்ற கணவன் கைது

image

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா்கள் வேலு(42) – சுமதி(39) தம்பதியினர். இவர்கள், கடந்த 5 மாதங்களாக ஶ்ரீபெரும்புதூர் அடுத்த ராஜலட்சுமி நகரில் தங்கி மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த வேலு, சுமதியின் தலையை கத்தியால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து புகாரின் பேரில் ஶ்ரீபெரும்புதூர் போலீசார் வேலுவை கைது செய்தனர்.

News September 17, 2024

காஞ்சிபுரத்திற்கு வந்த உள்துறை அமைச்சர்

image

காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக, ஆந்திரா மாநிலத்தின் உள்துறை அமைச்சர் வெங்கலபடி அனிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கட்சியி நிர்வாகிகளுடன் வந்த அவர், அருள்மிகு காமாட்சி அம்மனை மக்களுடன் மக்களாக நின்று தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு பிரசாதமும், குங்குமம் வழங்கப்பட்டது.

News September 17, 2024

9ஆவது நாளாக தொடரும் தொழிலாளர்கள் போராட்டம்

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9ஆவது நாளான இன்றும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8ஆம் நாளான நேற்று, சிஐடியு தொழிற்சங்கத்தினர், கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

News September 17, 2024

உலக தரம் வாய்ந்த கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலை

image

பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் நிறுவனம், காஞ்சிபுரத்தில் உலகத்தரம் வாய்ந்த மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையை, காஞ்சிபுரம் சிப்காட் தொழிற் பூங்காவில் 640 கோடி மதிப்பில் அமைக்க உள்ளது. இதில் நவீன முறையில் கண்ணாடிகளைத் தயாரித்து, இந்தியாவில் உள்ள பேனல் தயாரிப்பாளர்கள், மொபைல் உற்பத்தியாளர்களுக்கு வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News September 17, 2024

மயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை

image

எடமச்சி, பினாயூர், காவணிப்பாக்கம், மதுார், சிறுதாமூர், பழவேரி உள்ளிட்ட கிராமங்களில் மயில்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மயில்கள் தண்ணீர் தேடி, விவசாய நிலங்களுக்கு வருவதால் அவற்றின் பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது. எனவே, இப்பகுதிகளில் மயில்கள் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட துாரத்திற்கு தண்ணீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க உத்திரமேரூர் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 17, 2024

செப்.21ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உள்ளிட்டவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை வரும் செப்.21ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளன. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ள இந்த முகாமில் 18- 35 வயது வரை உள்ள பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதை SHARE பண்ணுங்க

News September 16, 2024

பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

மணிமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகள் லக்ஷனா(17), படப்பை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இன்று மதியம் வீட்டின் அறையில் இருந்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. குடும்பத்தார், கதவை உடைத்து பார்த்தபோது லக்ஷனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததால், லக்‌ஷ்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

News September 16, 2024

காஞ்சிபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர், அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!