India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரத்தில் பிறந்த திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் இன்று உடல்நல குறைவால் மீஞ்சூரில் காலமானார். கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கா.சுந்தரம். கடந்த ஆண்டு வேலூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், சுந்தரத்திற்கு ‘அண்ணா’ விருது வழங்கப்பட்டது. திமுக துணை பொதுச்செயலாளர், உயர்மட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்றும், நாளையும் செப்.18, 19) காஞ்சிபுரம் வட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க விரும்பும் பொதுமக்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள மண்ணிவாக்கம் கலைஞர் தெருவை சேர்ந்தவர் எம்.டி.சண்முகம்(72). திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த இவர், உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலை அவரது வீட்டில் இயற்கை எய்தினார். அவரது மறைவு குறித்து தகவல் அறிந்ததும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பரசன் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், உறவினர் யாருமின்றி, 9 வயது சிறுவன் தனியாக சுற்றி வந்துள்ளான். கோவிலில் பக்தர்கள் அவனிடம் விசாரித்தபோது, வீட்டிலிருந்து கோபித்துக் கொண்டு வந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான். உடனடியாக, சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், சிறுவனை மீட்டு, செங்கல்பட்டைச் சேர்ந்த அந்த 5ஆம் வகுப்பு மாணவனை அவனது தாயாரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில், வரும் செப். 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டு, வேளாண்மை தொடா்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கமளிக்கவுள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேற்று அறிவித்தார்
காஞ்சிபுரம் சந்தைக்கு பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் தக்காளியின் வரத்து குறைந்ததால், விலை உயர்ந்துள்ளது. இதுகுறித்து பூக்கடை சத்திரம் தக்காளி வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திராவில் வெள்ள பாதிப்பு உள்ளதால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. எனவே, கடந்த மாதம் கிலோ ரூ.20க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ.40க்கு விற்கப்படுகிறது என்று கூறினார். உங்கள் பகுதியில் தக்காளி விலை உயர்ந்துள்ளதா?
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், சுகாதாரத் துறை கடந்தாண்டு நடத்திய ஆய்வில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்தாண்டு மட்டும் 17,422 கர்ப்பிணிகள், குழந்தை பெற்றுக் கொண்டனர். இவர்களை சுகாதாரத் துறையினர் கண்காணித்தபோது, 5,492 தாய்மார்கள் ரத்த சோகையுடன் இருந்தது தெரியவந்துள்ளது. கடந்தாண்டு பிறந்த 17,422 குழந்தைகளில், 1,027 குழந்தைகள், இரண்டரை கிலோவுக்கும் குறைவான எடை கொண்டதாக பிறந்துள்ளது
காஞ்சிபுரத்தில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வார இறுதி நாட்களில் மின் தேவையின் அளவு குறைவாக இருக்கும். ஏனெனில், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிறு அன்று வார நாட்களை காட்டிலும் அதிக அளவு மின் தேவை இருந்தது. கோடைக்கால மின் தேவையை போல தற்போது ஏற்பட்டிருப்பதாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பவளவிழா ஆண்டாக இன்று கொண்டாடப்படுகிறது. திமுக பவள விழா மற்றும் முப்பெரும் விழா, சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். இதில், ‘முதல்வர் ஸ்டாலின்’ விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே 1974இல் பெரியார் சிலை வைப்பதற்காக, பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அரசு அனுமதி கொடுக்காததால், ராசமாணிக்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் சங்கர மடம் அருகே பெரியார் சிலை வைக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு பிப்.24ஆம் தேதி அன்று திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.