India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று செவ்வாய்க்கிழமை குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மனுக்களை பெற உள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் குறைகளை மனுக்களாக கொடுக்கலாம் என கலெக்டர் கலைச்செல்வி கூறியுள்ளார். ஷேர் பண்ணுங்க.
சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தாட்கோ மேலாண் இயக்குநர் க.சு.கந்தசாமி ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்தான், காஞ்சிபுரத்தை கண்காணிக்க உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில், நாளை காலை 11 மணிக்கு அமைச்சர் அன்பரசன் தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், புகார், கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று (23.09.2024) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். இதில் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் சங்கம் அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 15ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசு தொழிலாளர்களை வஞ்சிப்பதாக தெரிவித்து, சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
வந்தவாசி அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுமதி(38). இவா் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காய்கறி வாங்கிக் கொண்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, விளாங்காடு கூட்டுச்சாலை அருகே சென்றபோது எதிரே வந்த காா் ஒன்று இவரது பைக் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 13ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 மணி நேர வேலை, சி.ஐ.டி.யு தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டமானது நடைபெற்று வருகிறது. பணிக்கு திரும்பாவிட்டால் அடையாள அட்டை முடக்கப்படும் என சாம்சங் நிறுவனம் எச்சரித்திருந்த நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.
காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட தலைவர், செயலர், பொருளாளர், துணை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில், சட்ட ஆலோசகரும், நோட்டரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அரசு, முன்னாள் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி அருளானந்தம் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், கல்லுாரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி நேற்று நடந்தது. இறுதிப்போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணியினர், சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அணியை 17-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. வாழ்த்தலாமே!
திருமுடிவாக்கத்தில் வசித்து வந்தவர் அருண் சந்திரா (37), இவர் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு இடம் வாங்கி தருவதாகவும் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.45 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்து விட்டு தலைமறைவானர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று குன்றத்தூரில் பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
Sorry, no posts matched your criteria.