India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் ஆண்டில் நெல் II (சம்பா) பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாள். இதனை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள, ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் நாளை திமுக பவள விழா நடைபெறுகிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதனால் காவல்துறை சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிக்கு பொன்னேரி கரை வழியாக வரும் வாகனங்கள் கீழம்பி, வெள்ளை கேட் வழியாக செல்லலாம். செங்கல்பட்டிற்கு செல்லும் வாகனங்கள் வையாவூர் வழியாக செல்லலாம். கூட்டத்திற்கு வரும் திமுகவினருக்கு வசதியாக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவன ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ,காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த நிலையில் போராட்டத்திற்காக அமைத்திருந்த பந்தல் அனைத்தும் சேதமடைந்தது. அப்போது, வெட்ட வெளியில் அமர்ந்தும் தங்களது 16ஆவது நாள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பினர். உங்கள் கருத்து என்ன?
காஞ்சிபுரத்தில் இன்று (செப்.27) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் 5 மணி வரை நெல்வாய், அருணாசலபிள்ளைசத்திரம், கட்டியாம்பந்தல், ரெட்டமங்கலம், வளத்தோடு, வின்னமங்கலம், தோட்டநாவல், வாடாதவூர், சின்னாலம்பாடி, அமராவதிபட்டினம், கரிக்கிலி, மங்கலம், சித்தாமூர், சடச்சிவாக்கம், பெருங்கோழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப்புகள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி 2 மற்றும் 2A முதன்மை தேர்வு மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் RRB தேர்வுகளுக்கான வகுப்புகள் வரும் 30ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. வேலைத்தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க பவள விழாவினை முன்னிட்டு 28.9.2024 அன்று திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதனை அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு திமுக செயலாளருமான அன்பரசன் இன்று அரசு அலுவலர்கள் மற்றும் திமுகவினரோடு சேர்ந்து ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், (முதல்வர் கோப்பை) கல்லூரி மாணவியருக்கான மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து 26 கல்லூரிகள் பங்கேற்றன. இதில், 50 மீட்டர் நீச்சல் போட்டியில், கீழம்பி எஸ்.எஸ்.கே.பை கலை மற்றும் மகளிர் கல்லூரி மாணவி ஹேமசுந்தரி, கார்குழலி ஆகியோர் முதல் பரிசையும், லிதிகா இரண்டாம் பரிசையும் வென்றார்கள்.
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (செப்.26) முதல் அக்.1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் மாங்காடு, அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. தற்போது நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% 2 ஏரிகள் மட்டும் நிரம்பியுள்ளன. 75% 53 ஏரிகளும், 50% 75 ஏரிகளும், 25% 117 ஏரிகளும், 25% கீழாக 134 ஏரிகளும் தண்ணீர் இருப்பு உள்ளது. அடுத்த மாதத்தில் ஏரிகள் நிரம்பும் என எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வப்போது, மழை பெய்து வருவதால் ஏரிகள் நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதில், அதிகபட்சமாக ஶ்ரீபெரும்புதூரில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மழை நிலவரம்: காஞ்சிபுரம் 22.4 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் 41 மி.மீ., குன்றத்தூர் 39.4 மி.மீ., செம்பரம்பாக்கம் 37 மி.மீ. என மொத்தம் 139.8 மி.மீ. மழையும் சராசரியாக 23.3 மழையும் பொழிந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.